Followers

Thursday, November 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
          பலர் சிக்குவது கடனில் தான் சிக்குகின்றனர். கடனை போக்குவதற்க்கு என்று நிறைய பரிகாரத்தை பரிந்துரை செய்து இருக்கின்றனர். பரிகாரம் என்பதை விட இதனை சரி செய்யும் விதத்தில் தான் நம்முடைய திறமையே இருக்கின்றது.

கடன் வாங்காமல் யாரும் இருக்கபோவதில்லை. கடனை வாங்க தான் அரசாங்கமே பரிந்துரை செய்ய வைக்கும். கடன் வாங்கி உங்களை சிக்க வைக்க இதனை செய்கின்றனர். ஒரு அடிமை போலவே உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

கடன் வாங்கிவிட்டு அதனை சரி செய்யமுடியாமல் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு என்று தனியாக ஒரு பொது பரிகாரத்தை செய்யுங்கள் என்று நண்பர்கள் பரிந்துரை செய்தனர். இதனை நாமும் நினைத்துக்கொண்டு இருந்த வேளையில் இதனை இரு நண்பர்கள் சொல்லி இருந்தார்கள்.

ஒவ்வொரு தடவையும் நாம் நவ அம்மன் யாகத்தை முதன்மையாக செய்து வருகிறோம். வருகின்ற நாட்களில் கடன் பிரச்சினை தீர்வதற்க்கு என்று சிறப்பு யாகத்தை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

கடன் தீர்வதற்க்கு அதனால் வரும் பிரச்சினை தீர்வதற்க்கு என்று அடுத்து வரும் சிறப்பு யாகம் நடத்த இருக்கிறோம். இதனை முன்கூட்டியே உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் தயாராக இருக்கலாம் என்பதற்காக இதனை தற்பொழுது சொல்லுகிறேன். உடனே கிடையாது கொஞ்ச நாட்களுக்கு பிறகு இதனை செய்வோம்.

ஜாதக கதம்பத்திற்க்கு வரும் அனைவரும் பயன்பெறவேண்டும் என்பது போலவே அந்த பூஜைகள் இருக்கும். அனைவரும் தங்களுக்குள்ள கடன் தீர்வது பாேலவே அது இருக்கும்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: