Followers

Sunday, November 4, 2018

கர்மத்தில் தர்மம்


வணக்கம்!
          ஒவ்வொரு தொழிலும் அதன் தோல்வியை சந்திக்க ஒரு சில காலம் எடுக்கும். காலசுழற்சியின் காரணமாக ஒரு தொழில் தோல்வி அடைவதற்க்கு என்று ஒரு சில காலம் எடுக்கும்பொழுது அதுவாகவே தோல்வி அடையும். மனிதர்களாலும் ஒரு தொழில் தோல்வி அடையும் அது மனிதர்கள் செய்யும் தவறால் நடப்பதாக இருக்கும்.

கர்மஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாவது ஸ்தானத்தை வைத்து தொழில் செய்யும்பொழுது அதில் தர்ம நோக்கத்தோடும் அந்த தொழிலை செய்யும்பொழுது கண்டிப்பாக அது நீண்ட காலமாக செல்லும். தர்மம் இல்லாமல் அதர்மமாகவவே அது சென்றால் ஒரு சில காலக்கட்டத்தில் அந்த தொழில் தோல்வியை அடையும்.

கர்மஸ்தானத்தில் தர்மத்தை எப்படி செய்யமுடியும் அப்படி செய்தால் அது தோல்வியை சந்திக்காதா என்று கேட்கலாம். எல்லா நேரத்திலும் தர்மத்தையே செய்யதுக்கொண்டு இருக்கமுடியாது. பத்திற்க்கு ஒன்று என்ற கணக்கில் செய்யலாம்.

கர்மஸ்தானத்தில் தர்மம் என்று சொல்லுவது அந்த தொழிலை நேர்த்தியாக நடத்துவதிலும் இருக்கின்றது. ஒரு சிலருக்கு ஒரு தொழில் நன்றாக சென்றுக்கொண்டு இருக்கும். தொழில் நேர்த்தியாக சென்றுக்கொண்டு இருக்கும்பொழுது இவர்களே அந்த தொழிலை தவறான பாதைக்கு இழுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் அதனாலும் அந்த தொழில் தோல்வியை சந்திக்கின்றது.

உங்களுக்கு எந்த தொழில் நன்றாக வருகின்றதோ அந்த தொழிலை கடைசி வரை செய்யலாம். உங்களின் கர்மப்படி அந்த தொழில் உங்களுக்கு அமைக்கின்றது அதனை விட்டுவிட்டு பல தொழிலும் கையில் பணமே இல்லாமல் அல்லது அடுத்த தொழிலில் அறிவு இல்லாமல் நுழைந்தால் கர்மமே உங்களை காவுவாங்கிவிடும்.

தீபாவளி போனஸ் இலவச சோதிட ஆலோசனைக்கு கூப்பிடலாம். அனைவருக்கும் தீபாவளிக்குள் இலவச சோதிட ஆலோசனை சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: