Followers

Friday, November 2, 2018

தீபாராதனை மற்றும் நைவேத்தியம்


ணக்கம்!
          ஒரு படையல் போட்டு அல்லது ஒரு பூஜை செய்து அந்த பூஜைக்கு தீபாராதனையை காட்டுவோம். இந்த தீபாராதனையை காட்டிவிட்டு அந்த தீபாராதனை எரிந்துக்கொண்டு இருக்கும்பொழுதே நாம் நைவேத்தியத்தை எடுத்து சாப்பிட்டுவிடகூடாது.

கற்பூர தீபாராதனை காட்டிவிட்டு அந்த கற்பூரம் எரிந்துக்கொண்டு இருக்கும்பொழுது நாம் நைவேத்தியத்தை சாப்பிடாமல் அந்த கற்பூரம் அதுவாகவே அணைந்த பிறகு நைவேத்தியத்தை நீங்கள் எடுத்து சாப்பிடலாம் பிறர்க்கும் கொடுக்கலாம்.

பொதுவாகவே ஒரு தெய்வத்திற்க்கு தீபாராதனை காட்டும்பொழுதும் அல்லது ஏதோ ஒரு பூஜையை செய்த பிறகும் அதனை நாம் உடனே சாப்பிடாமல் அதனை ஒரு குறைந்தது மூன்று நிமிடமாவது சென்ற பிறகு சாப்பிட்டால் நல்லது.

தெய்வங்கள் வந்து நமது நைவேத்தியத்தை சாப்பிட்ட பிறகு அதாவது அதன் காரத்துவத்தை எடுத்துக்கொள்ளும். பெரும்பாலும் அதன் மணம் மற்றும் அதன் காரத்துவம் இனிப்பு அல்லது துவர்ப்பு என்று இருக்கும் இதனை தெய்வங்கள் நுகர்ந்த பிறகு நாம் சாப்பிட்டால் நல்லது.

தெய்வங்கள் அதனை வந்து சாப்பிடும்பொழுது அதனை உடனே எடுத்தால் அதனை சாப்பிடவிடாமல் செய்வது போல ஆகிவிடும் என்பதால் நீங்கள் மூன்று நிமிடத்திற்க்கு பிறகு எடுத்து சாப்பிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: