Followers

Sunday, November 18, 2018

அறிவிப்பு

வணக்கம்!
          புயலின் தாக்கத்தால் கடும் பாதிப்பை தஞ்சாவூர் மாவட்டம் சந்தித்தது. எனது சொந்த ஊரும் கடும் பாதிப்பை அடைந்தது. ஏற்கனவே எனது ஊரை பார்த்தவர்களுக்கு தற்பொழுது பார்த்தால் அடையாளமே தெரியாத அளவுக்கு பாதிப்பு இருக்கின்றது.

அடிப்படையான வசதிகள் கூட தற்பொழுது கிடைக்கவில்லை. மின்கம்பங்கள் சரி செய்து மின்சாரம் கிடைப்பதற்க்கு கூட மாதகணக்கு ஆகும் என்று தோன்றுகின்றது. எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளிக்கவேண்டும் என்ற தன்னம்பிக்கை உள்ளதால் போராடி மீண்டுவிடலாம். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டார்கள் அனைவருக்கும் நன்றி.

தொலைதொடர்பு பிரச்சினை இருக்கின்றது. அவ்வப்பொழுது தொலைதொடர்பு வேலை செய்வதால் இந்த பதிவை தரமுடிந்தது. பதிவை தொடர்ந்து தருவதற்க்கு அனைத்து முயற்சியும் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் மீண்டு வந்துவிடுவேன். அதுவரை பொறுமையாக இருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: