Followers

Tuesday, November 20, 2018

நன்றி

வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் மிகுந்த போராட்டத்தில் தான் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த போராட்டத்தையும் மீறி நமது நண்பர்களுக்கு தேவையான ஆன்மீக வழியில் உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன். 

புயலால் பாதிப்படைந்து இருக்கின்றார் ஒன்றும் கேட்டவேண்டாம் என்று யாரும் இருக்கவேண்டாம். தாராளமாக அனைவரும் கேட்கலாம். மின் பிரச்சினை காரணமாக தான் பதிவை தொடர்ச்சியாக கொடுக்கமுடியவில்லை.

புயல் அடித்தபொழுது கடும் பாதிப்பை இந்த மாவட்டம் அடைந்தது. பல பேர்க்கு வெளியில் இந்த பாதிப்பு தெரியவில்லை என்று மட்டும் புரிகின்றது. வெளியில் இருந்து தொடர்புக்கொள்ளும் நண்பர்கள் இதனைப்பற்றி சொல்லுகின்றனர்.

பலர் என்னை தொடர்புக்கொண்டு என்ன உதவி வேண்டும் என்று கேட்டனர். உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்பில் இருந்து பல வருடங்கள் சென்ற நண்பர்கள் கூட இந்த நேரத்தில் தொடர்புக்கொண்டது மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று வரை சும்மா இருந்த இயற்கை இரவு முதல் காற்று வீச தொடங்கியது. இன்று மழை கூட வருவது போலவே இருக்கின்றது. அடுத்த புயலும் வரும் என்று சொல்லிருக்கின்றனர். அம்மன் அருளால் அதன் தாக்கம் குறையவேண்டும்.

ஆன்மீக வழியில் இருந்த காரணத்தால் தான் புயலின் பொழுது பெரும் சேதம் எனக்கு ஏற்படவில்லை. சேதம் என்பது பிறரை விட குறைவு. உங்களின் பிரச்சினையை வழக்கம் போல தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம். ஜாதக பலன் கேட்க அனுப்பிய நண்பர்களுக்கு மட்டும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். விரைவில் அந்த சேவையும் தொடரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

அய்யா
தாங்கள் போல் நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போழுதும் துணை இருப்பான்