Followers

Wednesday, November 7, 2018

தோல்வியில் இருந்து வெற்றி


வணக்கம்!
          ஒருவருக்கு ஒரு தோல்வி ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு அந்த தோல்வியை சரி செய்வதற்க்கு என்று ஒருவர் பாடுபடுவது அதிக காலம் எடுக்கும். மனிதனுக்கு நம்பிக்கை கொடுப்பதற்க்கு தோல்வி வந்தால் தான் வாழ்வில் வெற்றி வரும் என்று சொல்லுவார்கள்.

தோல்வி வந்த பிறகு வெற்றி காண்பது என்பது மிகவும் எளிதான ஒரு காரியம் கிடையாது. ஒருவருக்கு ஒரு வெற்றியை கொடுத்து ஒரு தோல்வியை கொடுக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த தோல்விக்கு பிறகு வெற்றி எங்கு இருக்கின்றது என்று ஜாதகத்தை தேடிப்பார்த்தால் கொஞ்சம் கூட தெரியாது.

தோல்விக்கு பிறகு வரும் தசாவை பார்த்தால் அவனை எழுந்துவிடகூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கிரகம் வேலை செய்துக்கொண்டு இருக்கும். கிரகங்களை சரி செய்து அவனை வெற்றி பெறவைப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடுகின்றது.

தசாநாதன் கொஞ்சம் கூட ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்றால் பிறகு வரும் கோச்சாரபலன் எல்லாம் பெரியதாக ஒன்றும் அளிக்கபோவதில்லை. ஏதாே கொஞ்சம் கொடுக்கும். பத்து லட்சம் கொடுக்க வேண்டிய இடத்தில் பத்து ரூபாய் வருவது போல இருந்தால் எப்படி இருக்கும்.

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் இப்படி தான் வேலை செய்கின்றன. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு உங்களின் குருவை நாடி வாழ கற்றுக்கொண்டால் கண்டிப்பாக மாற்றத்தை அவரால் தான் கொடுக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: