Followers

Wednesday, November 7, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          தற்பொழுது எல்லாம் சாேதிடம் பார்த்து சொல்லும் விதத்தில் பல மாறுதல்கள் வந்துவிட்டன. சோதிடபலன் பார்க்கும் வரும் நபர்களுக்கு அனைத்து தகவலும் நன்றாக தெரிந்துவிடுகின்றது. இதனை ஒரு சோதிடரின் வாயின் வழியாக கேட்டால் போதும் என்று தான் கேட்க வருகின்றனர்.

ஒரு சிலர் இதில் என்ன செய்கின்றார்கள் என்றால் எனக்கு சோதிடம் நன்றாக தெரிகின்றது என்ற நினைப்பில் சோதிடம் பலன் சொல்லும் சோதிடர்களின் வார்த்தையை அதிகம் கவனிப்பதில்லை. ஏற்கனவே எனக்கு இது தான் நடக்கும் என்று ஒரு தீர்மானித்தை வைத்துக்கொண்டு வந்துவிடுகின்றனர்.

சோதிடபலனை தீர்மானித்துவிட்டு சோதிடபலனை கேட்கும்பொழுது ஒன்று நடக்கின்றது அது எனக்கு ஒரு தசா நடக்கின்றது என்றால் இந்த தசா எனக்கு யோகத்தை தரும் என்று வரும் வாடிக்கையாளர்களே தீர்மானித்துவிடுகின்றனர். பலருக்கு இந்த இடத்தில் பிரச்சினை வருகின்றது.

தசா பலன் நமக்கு நல்லதை தான் தரும் என்பதை ஒரு போதும் நம்பிவிடகூடாது பலருக்கு தசாநாதன் சரியாக பலனை கொடுப்பதில்லை. சோதிடத்தில் நன்றாக ஆராய்ச்சி செய்யும்பொழுது இதனைபற்றி தெரியவரும். தசாநாதன் நன்றாக பலனை கொடுக்கவில்லை என்றால் அவர் நம்பி ஏமாந்து போய்விடுவார்கள். அதனால் சோதிடத்தை அவ்வளவு எளிதில் பார்த்துவிட்டு ஏமாந்துபோய்விடகூடாது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தான் அதனைப்பற்றி தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: