Followers

Thursday, February 13, 2020

ஆன்மீகத்தின் குரு


வணக்கம்!
          இந்த காலத்தில் பெரும்பாலும் குரு என்பவரை தேடிச்செல்வதை ஆன்மீகத்தின் நோக்கத்திற்க்காக அல்ல அவர் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்க்கு குருவை தேடிச்செல்வதை வைத்திருக்கின்றனர். கலியுகத்தில் அப்படி தான் இருக்கும் என்றாலும் நல்லவர்களும் வீணாக போய்விடுகின்றனர் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

ஆன்மீகம் என்பது சொந்த தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்க்கு என்று இல்லாமல் தன்னுடைய பிறவி பயனை அடைவதற்க்கு என்று தேடும் நபர்களுக்கு கண்டிப்பாக ஆன்மீகம் கை கொடுக்கும். ஆன்மீகத்தின் துணைக்கொண்டு நம்முடைய வாழ்க்கை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் தான் அது குருவின் துணை இல்லாமல் தான் கற்ற ஆன்மீகத்தினை வைத்து நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.

என்னையை உதாரணமாக எடுத்துக்கொண்டால் நான் குருவிடம் கேட்டது ஆன்மீகத்தை கற்றுக்கொடுங்கள் என்று கேட்டேன் அதன்பிறகு அதனை வைத்து என்னுடைய வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொண்டேன். சொந்த வாழ்க்கைக்கு என்னு பயன்படுத்தியது மிக மிக குறைவு என்று தான் சொல்லவேண்டும்.

உங்களிடம் என்னிடம் சொந்த தேவைக்கு கேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை மாறாக உங்களை நன்றாக வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை ஆன்மீக வழியில் வளர்த்துக்கொண்டால் சொந்த தேவைக்கு கேட்டதைவிட இது தான் காலம் காலமாக பிறவியோடு வரப்போகின்றது என்பது உங்களுக்கு புரியும்.

நமது அம்மன் கோவில் கட்டும் பணியை ஆரம்பிக்க இருப்பதால் உங்களின் உதவியை நாடுகிறேன். தங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: