Followers

Wednesday, February 26, 2020

ஆலயமணி


வணக்கம்!
         நாம் வீடியோ பதிவுகளை தயார் செய்வதால் ஜாதககதம்பத்தை எழுதாமல் விட்டுருந்தேன். தற்பொழுது அதன் பணி விரைவில் நடைபெறுவதால் ஜாதககதம்பத்திலும் பதிவுகளை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் தீர்மானித்து இருக்கிறோம். 

உங்களின் ஒத்துழைப்பால் வீடியோ பதிவுகள் நல்ல முறையில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது. அனைவரும் அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். தற்பொழுது கோவிலில் உள்ள ஆலயமணி எதற்க்கு என்பதைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டேன் அதில் ஆலயமணி கோவிலில் தனித்தன்மையாக அதற்கு என்று கோபுரம் வைத்து கட்டும்பொழுது அது தன்னுடயை ஆற்றலை வழங்கும்.

ஆலயமணியின் அடியில் நிற்க்கும்பொழுது அது பாவத்தை போக்ககூடிய தன்மை உடையது. இந்த ஜென்மத்தில் நாம் செய்த எந்த ஒரு பாவமும் ஆலயமணியின் அடியில் நிற்க்கும்பொழுது போய்விடும். மின்னசாரமணியில் நாம் நின்றால் போகாது. ஆலயமணி மனிதர்கள் அடிப்போது போல இருக்கும்பட்சத்தில் மனிதனின் பாவங்கள் போய்விடுகின்றன.

இதனைப்பற்றி முழுமையான வீடியோ பதிவை பார்க்க


நமது அம்மன் பூஜை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளேன். பிரதி மாதம் 4 தேதிக்குள் நடத்தப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அதற்கு தகுந்தார் போல் தங்களை தயார் செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: