Followers

Friday, February 14, 2020

காதல் திருமணம்


வணக்கம்!
          எப்பேர்பட்ட சூழ்நிலையும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால் ஒரு வீட்டில் தன்னுடைய பெற்றோர்களின் அனுமதி இன்றி தான் வளர்த்த பிள்ளைகள் தங்களின் அனுமதி இன்றி திருமணம் செய்துக்கொள்ளும்பொழுது அவர்களின் பெற்றோர்கள் படும்பாடு மிக கொடியதாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையை எந்த ஒரு பெற்றோர்களும் தாங்கிக்கொள்ளமுடியாது.

இன்றைய காலத்தில் காதல் திருமணம் சகஷம் என்றாலும் அது பெற்றோர்களின் அனுமதியின்றி நடைபெறும்பொழுது அது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். இன்றைய காலத்தில் படித்தவர்கள் இதனை எல்லாம் ஏற்றுக்கொள்வார்கள். இது ஒன்றும் பெரியது இல்லை என்று கூறப்பட்டாலும் அந்த நிலை வரும்பொழுது ஒவ்வொருவரும் மனதிற்க்குள் கஷ்டபடுகின்றனர். இதனை ஒரு சிலர் தாங்கள் வளர்த்த பிள்ளை என்பதால் காட்டிக்கொள்வதில்லை.

நாம் நிறைய இடத்தில் சோதிடம் பார்க்கும்பொழுது அவர்களின் வாரிசுகளின் ஜாதகத்தில் இராகு கேது களத்திர ஸ்தானத்தில் சம்பந்தப்படும்பொழுது அவர்களுக்கு பிள்ளைகள் திருமணம் காதல் திருமணமாக இருக்ககூடும் என்று சொல்லி எச்சரிக்கை விடுப்பது உண்டு. ஒரு சிலருக்கு இராகு தசா நடைபெறும்பொழுது இந்த மாதிரியான சூழ்நிலை உருவாகும் என்று சொல்லிருக்கிறோம்.

காதல் திருமணங்கள் இராகு கேது இல்லாமல் நடைபெறுவதில்லை. இராகு கேது ஒரு ஜாதகத்தில் பலம் பொருந்தி அமைந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றுவிடும். சந்திரன் செல்லும் நட்சத்திரம் இராகுவின் நட்சத்திரமாக இருந்தால் அவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றுவிடும். சந்திரன் இராகுவோடு இணையும்பொழுதும் காதல் திருமணத்திற்க்கு வாய்ப்புகள் அதிகம்.

காதல் திருமணம் நடைபெற்றுவிட்ட தம்பதிகள் நன்றாக வாழ்க்கின்றார்களா என்று கேட்கலாம். முக்கால்வாசி பேர் ஒழுங்காக வாழ்வதில்லை. ஒழுங்காக வாழ்கிறேன் என்று சொல்லும் தம்பதிகள் மிக மிக குறைவாகவே இருப்பார்கள். நான் காதல் திருமணம் செய்து இருக்கிறேன் நான் நன்றாக வாழ்கிறேன் என்று சொல்லும் தம்பதிகளாக நீங்கள் இருந்தால் உங்களை மாதிரி ஒரு ஏமாந்த ஆள் வேறு ஆள் இல்லை என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: