Followers

Sunday, February 16, 2020

கோவிலுக்கு செல்லும் பழக்கம்


வணக்கம்!
          ஒரு பிரச்சினையில் ஒருவர் சிக்குகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவரின் பிரச்சினை மிகப்பெரிய ஒன்றாக இருக்கும்பொழுது அதில் இருந்து ஒருவர் மீள்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால் அவர் செய்யவேண்டியது நிறைய சிவன் கோவிலுக்கு தொடர்ச்சியாக செல்லவேண்டும். இதனை செய்வதற்க்கு அவரிடம் நிறைய வைராக்கியம் வேண்டும்.

நான் பார்த்தவரையில் பிரச்சினையில் சிக்குபவர்கள் அவர்கள் வெளியில் செல்வதில்லை. அதாவது கோவிலுக்கு செல்வதற்க்கு எல்லாம் பிடிக்காமல் இருப்பார்கள். கோவிலுக்கு செல்வதற்க்கு பிடிக்காத மற்றும் விரும்பாத நபர்களால் தான் இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் வளர்ந்த முறை அப்படிப்பட்ட ஒன்றாக இருப்பதால் தான் இதற்கு காரணமாக அமைக்கின்றது.

கோவிலுக்கு சென்றால் பிரச்சினை ஒய்ந்துவிடுமா அல்லது பிரச்சினை போய்விடுமா என்று கேட்கலாம். பிரச்சினை வரும் நேரத்தில் சென்றால் ஒய்ந்துவிடாது அந்த நேரத்தில் சென்றால் குறிப்பிட்ட காலத்தில் அந்த பிரச்சினையை தீர்க்கும் வழி தெரிந்துவிடும். நம்மிடமே ஒருவர் வருகின்றால் என்றால் அவர் அந்த நேரத்தில் பிரச்சினையில் இருந்தால் கோவிலுக்கு செல்லுங்கள் என்று தான் முதலில் சொல்லுவோம். கோவிலுக்கு சென்ற பிறகு அதன்பிறகு தான் நாங்கள் வேலை செய்ய ஆரம்பிப்போம்.

எல்லா வழியிலும் ஒருவர் மிக சரியாக இருக்கும்பொழுது தான் நாம் செய்யும் வேலைகள் எளிதில் அவருக்கு கிடைக்கும். பீடையை அதிகமாக வைத்திருக்கும் நபர்களுக்கு ஆன்மீகம் உடனே வேலை செய்வதில்லை. நீங்கள் உங்களின் குழந்தையை வளர்க்கும்பொழுதே நீங்கள் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு சென்று காட்டிக்கொடுங்கள். இப்படிப்பட்ட கோவிலுக்கு எல்லாம் நீங்கள் சென்றால் உங்களின் எந்த வித பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கு பிற்காலத்தில் அது உதவும்.

பல குடும்பங்களில் நான் பார்த்த விசயத்தை தான் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். பல குடும்பத்தில் கோவிலுக்கு செல்வது என்பது பிடிக்காத ஒரு வேலையாக இருக்கின்றது. அவர்களிடம் நாம் என்ன தான் சொன்னாலும் நடக்கபோவதில்லை. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: