Followers

Monday, February 3, 2020

ஏழரைச்சனி


வணக்கம்!
          ஏழரைச்சனி நடைபெறும் ஆட்களின் கண்களை பார்த்தாலே தெரிந்துக்கொள்ளலாம். இவர்களுக்கு ஏழரைச்சனி நடந்துக்கொண்டு இருக்கின்றது என்று சொல்லிவிடலாம். ஏழரைச்சனி கண்களுக்கு அதிக பாதிப்பை கொடுக்கும். ஏழரைச்சனியின் காலத்தில் கண்களுக்கு ஆப்ரேஷன் செய்யகூடிய ஒரு நிலை உருவாகும். ஏழரைச்சனியின் காலத்தில் அதுவும் இரண்டாவது சுற்றில் இது கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லலாம்.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒருவரின் கண்களை பார்த்தே தெரிந்துக்கொள்ளமுடியும். ஏழரைச்சனியின் காலத்தில் கண்களை சுற்றி கருவளையம் போல ஒன்று உருவாகும். இவர்களுக்கு எல்லாம் ஏழரைச்சனி நடக்கின்றது என்று நாம் தெரிந்துக்கொள்ளலாம். காலும் கண்களும் தான் அதிகமாக ஏழரைச்சனியின் காலத்தில் பாதிப்படைகின்றது.

ஒரு சிலருக்கு கால் முறிவு ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு கண்களில் பிரச்சினை என்பது வருகின்றது. மிக குறைந்தபட்சமாக கைகளை உடையும். இதனை தவிர மற்ற உறுப்புகள் பாதிப்படைவது குறைவாகவே இருக்கும். என்ன பயமுறுத்துகிறேன் என்று நினைக்கின்றீர்களா இல்லைவே இல்லை இது ஒரு எச்சரிக்கை பதிவாக எடுத்துக்கொள்ளலாம்.

ஏழரைச்சனியின் காலத்தில் பெரும்பாலும் உடல்ரீதியான பிரச்சினை மட்டும் இன்றி மனரீதியாக அதிக பாதிப்பை உருவாக்கும் நிகழ்ச்சியும் இருக்கும். மனரீதியாக என்றால் உங்களின் கணவன் அல்லது மனைவி இவர்களுக்கும் உங்களுக்கும் அதிகபடியான பிரச்சினை உருவாகிவிடுகின்றது. இதனை சரிசெய்வது என்பது நீங்கள் காக்கும் பொறுமையில் தான் இருக்கின்றது.

பொறுமையை அதிகபடியாக சோதனை சந்திக்கும் காலமாகவே இது இருக்கும். உங்களை உங்களின் துணை அடித்தாலும் கோவப்படாமல் இருந்தால் இது தான் நல்ல பரிகாரமாக உங்களுக்கு இருக்கும். முடிந்தவரை அனைத்திலும் கவனத்தோடு நடக்க வேண்டும் என்ற கொள்கையை வகுத்துக்கொண்டு செயல்படுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: