Followers

Sunday, September 4, 2016

ஹோமம்


ணக்கம்!
         ஒவ்வொருவரும் நிறைய ஹோமம் உங்களின் வீட்டில் செய்வீர்கள். நம்முடைய வீட்டில் அக்னியை வைத்து ஹோமம் செய்வதே நமது கோரிக்கையை அக்னி எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தெய்வத்திற்க்கு சேர்க்கும் என்ற நம்பிக்கை.

அக்னி கடவுள் என்றால் செவ்வாய் கிரகம் மற்றும் சூரியன் கிரகம் என்று நாம் சொல்லுகிறோம். அக்னி என்பது விரைவாக எடுத்துக்கொண்டு நம்முடைய கோரிக்கையை சேர்க்கும். நவகிரகத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகம் அதிக விரைவாக செயல்பட்டு நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றும்.

உங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதத்தில் நமது வாடிக்கையாளர்க்கு அவர்களின் வேண்டுகோளில் படி ஹோமம் செய்து கொடுப்பது வழக்கம். 

இந்த ஹோமத்தில் உங்களின் முன்னோர்கள் செய்த புண்ணியம் மற்றும் நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை எடுக்கமுடியும். பல நண்பர்களுக்கு இதனை செய்துக்கொடுத்து இருக்கிறேன். அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கின்றது.

பொதுவாக நான் யாருக்கும் இதனை எல்லாம் பரிந்துரை செய்வதில்லை. அதாவது ஒவ்வொருவரும் விரும்பினால் இதனை செய்துக்கொடுப்பது உண்டு. பரிகாரம் என்பது ஒரு தீபம் அல்லது அர்ச்சனையோடு முடித்துவிடுவது உண்டு. 

அம்மனை வைத்து செய்யும் ஹோமத்தை எல்லாம் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை விரும்பி செய்ய சொன்னால் மட்டும் செய்வது உண்டு. உங்களுக்கு இப்படிப்பட்ட ஹோமம் எல்லாம் தேவை என்றால் அதற்கு என்று நீங்கள் கேட்டு என்னிடம் செய்துக்கொள்ளலாம். 

உங்களின் தேவை என்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் அதற்கு தகுந்தார் போல் நான் சொல்லிவிடுவேன். வெறும் ஜாதகபலன் பரிகாரம் என்றால் இதனை சொல்லுவதில்லை. உங்களுக்கு என்ன தேவை என்பதை சொல்லிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அரசாங்க வேலை கிடைக்குமா?


வணக்கம்!
          என்ன தான் லட்சக்கணக்கில் தனியார் கம்பெனியில் வேலை செய்தாலும் அரசாங்க வேலை பாேல் வருமா என்று நம்ம ஆட்கள் நினைப்பது உண்டு. அரசாங்கம் வேலை என்றால் அனைவருக்கும் பிடிக்ககூடிய ஒன்று அல்லவா. 

அரசாங்க வேலை எல்லாேருக்கும் கிடைக்க கூடிய ஒன்றா என்றால் அது இல்லை என்று தான் ஜாதகத்தை பார்த்து சொல்லவேண்டும். ஜாதகத்தில் அரசாங்க வேலை உள்ள அமைப்பு பெரும்பாலும் இருக்காது.

சூரியன் நன்றாக இருந்தால் பெரும்பாலும் ஜாதகர் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யலாம். சூரியன் சரியில்லை என்றால் அரசாங்க வேலை கிடைக்காது என்று சொல்லலாம். ஒரு சில ஜாதகங்களில் சூரியன் நன்றாக இருந்தும் ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்காமல் இருக்கின்றனர்.

பெரும்பாலும் ஏழரைச்சனி காலத்தில் அரசாங்க வேலை கிடைக்காது. ஏழரைச்சனி காலத்தில் போராடி தான் அரசாங்க வேலையை வாங்க வேண்டியிருக்கும்.

சூரியன் சரியில்லை என்றாலும் அரசாங்க வேலை கிடைக்கவேண்டும் என்றால் ஞாயிறு தோறும் சூரியனை வணங்கி வந்தால் போதும் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 3, 2016

சனியின் பிடி


வணக்கம்!
          ஒருவருக்கு அஷ்டமசனி ஏழரைசனி நடைபெறும்பொழுது அவர்கள் சொல்லுவது போல் நடந்துக்கொள்ளமுடியாது. சனி அவர்களை பாதை திருப்பிவிட்டுவிடும்.

ஒருவர் ஆன்மீகபணி செய்துக்கொண்டு வந்தால் அவர்களுக்கு இப்படி ஏழரைசனி அஷ்டமசனி நடைபெறும் காலத்தில் அதில் இருந்து வெளியேற்றிவிடும். 

தெய்வபலன் கிடைக்காமல் செய்வதற்க்கு இப்படிப்பட்ட வேலையை செய்கிறது. தெய்வபலன் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் ஏதாவது ஒரு சிக்கலில் சென்று மாட்டிக்கொள்ளட்டும் என்று இப்படி மாட்டிவிட்டுவிடும்.

மனிதர்கள் வாக்கு தவறகூடாது என்று சொல்லுவார்கள் அல்லவா. இந்த காலத்தில் எப்படிப்பட்டவர்களுக்கும் வாக்கு தவற வைத்துவிடுவார் சனிபகவான். வாக்கு தவறி பல கஷ்டத்திற்க்கு ஜாதகர் ஆளாவார்கள்.

தற்பொழுது ஏழரை சனி மற்றும் அஷ்டமசனி நடைபெறும் நண்பர்கள் உங்களை சுயபரிசோதனை செய்து பாருங்கள். நீங்கள் சொல்லுவது போல் நடந்துக்கொள்ளமுடியாது.

பல வழிகளிலும் உங்களை மாட்டிவிட என்ன செய்யவேண்டுமாே அதனை உங்களுக்கு தெரியாமல் செய்துவிடும். சுயஅறிவு என்பது அந்தளவுக்கு வேலை செய்யாது. சொல்அறிவை கேட்கவும் மாட்டீர்கள்.

 அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்க


வணக்கம்!
          ஏதோ ஒரு கிரகத்தி்ன் பாதிப்பு பெரிய அளவில் நம்மை தாக்கும்பொழுது நாம் நிலைகுலைந்து போகிறோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று ஜாதகத்தை தூக்கிக்கொண்டு சோதிடரை நோக்கி ஓடிவிடுகிறோம்.

கஷ்டத்தை நம்மால் ஏன் தாங்கிக்கொள்ளமுடிவதில்லை என்று ஒரு கணம் சிந்தித்து பார்த்தால் நாம் எதற்க்கும் பயப்படமாட்டோம். கஷ்டத்தை நாம் முதலில் அனுபவிக்கவில்லை என்பது தான் உண்மையான ஒரு விசயம்.

என்ன கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா என்று கேட்கதோன்றும். சந்தோஷத்தை அனுபவிக்கிறோம் அல்லவா அது போல கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டால் நமக்கு கஷ்டம் என்பது அதிகம் வரபோவதில்லை.

வாரஇறுதியில் ஏதோ ஒரு வெளி இடத்திற்க்கு சென்று நாம் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கிறோம் நமக்கு என்ன என்ன தேவையோ அதனை எல்லாவற்றையும் மகிழ்வோடு கொண்டாடிக்கொண்டு வருகிறோம். கஷ்டத்தை அனுபவிக்கவேண்டும் என்று ஒரு நாள் நாம் நினைத்து இருக்கிறோமா?

கஷ்டத்தை எதிர்க்கொள்ள நமக்கு சக்தி என்பது வேண்டும். அது எப்பொழுது நமக்கு கிடைக்கும் என்றால் நாம் ஒவ்வொரு நாளும் வீட்டில் இருப்போம் அல்லவா. வீட்டில் இருக்கும்பொழுது அதாவது சும்மா இருக்கும்பொழுது நமக்கு என்ன தோன்றும் அட என்ன டா போர் அடிக்கிறது டிவியை ஆன் செய்து பார்ப்போம் அல்லது ஏதாவது சினிமாவிற்க்கு போவோம். இன்று போர் அடிக்கிறது என்றால் அதிக பேர் மது அருந்த சென்றுவிடுகிறார்கள். உங்களுக்கு வருகின்ற கஷ்டத்தை எதிர்நோக்காமல் டைவர்ட் செய்து சென்றுவிடுகிறோம்.

கஷ்டத்தை ஒருவரும் அனுபவிக்காமல் அப்படியே சேர்த்து சேர்த்து வைத்துக்கொண்டு அது பெரிய அளவில் உருவாகிவிடுகிறது. அது நம்மை பெரிய அளவில் அடிக்கும்பொழுது நம்மால் எதிர்க்கொள்ளமுடியாமல் கஷ்டத்தில் மாட்டிக்கொள்கிறோம்.

நமக்கு போர்அடிக்கும் நேரத்தில் எதிலும் டைவர்ட் ஆகாமல் அப்படியே அதனை எதிர்க்கொள்ள ஆரம்பியுங்கள். எந்த கஷ்டமும் உங்களுக்கு வரவே வராது அப்படியே சின்ன கஷ்டம் கூட வந்தாலும் அதனை நீங்கள் எளிதில் சமாளிக்கமுடியும்.

மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது டிவி பார்க்கவேண்டும். கவலையாக இருக்கும்பொழுது கவலையை அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாம் நேரத்தையும் டிவியை பார்த்தே போக்கிக்கொண்டு இருந்தால் ஏழரை சனி அஷ்டமசனி அர்த்தாஷ்டம சனி இன்னும் பல கிரகங்களின் கொடுரபிடியில் தனிமையை மட்டுமே அதாவது ஜெயில் வாழ்க்கையில் இருப்பது போலவே ஆகிவிடும்.

பல ஆன்மீக பயிற்சிகள் மற்றும் எளிதில் உங்களை மாற்றும் வழிகள் எல்லாம் நமது கட்டண சேவையில் இருக்கின்றது உடனே அதில் இணைந்து உங்களின் வாழ்க்கையை நல்ல வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளுங்கள். 

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அனுப்பிவைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 2, 2016

சொகுசுக்காரன் மனக்காரன் சம்பந்தம்


வணக்கம்!
          சுக்கிரனின் கிரகம் சந்திரனோடு சேரும்பொழுது அவர்கரளின் மனதில் எப்பொழுதும் சந்தோஷத்தோடு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்து அவர்கள் சந்தோஷத்தோடு வாழ்வார்கள்.

சந்திரனை பொறுத்து தான் மனது என்பதால் சுக்கிரனோடு சேரும்பொழுது சுகபோக வாழ்வை மனது நாடும். அவர்கள் அதிகம் விரும்புவது சுகபோக வாழ்க்கையாக இருக்கும்.

ஒரு சிலர் எந்த நேரமும் அவர்களின் மனதில் சோகமாக இருப்பார்கள் அல்லவா அதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்க்கு சந்திரன் சுக்கிரன் சேர்க்கை காரணமாக இருகின்றது.

ஒரு சிலருக்கு சினிமா பார்ப்பதற்க்கு மிகவும் பிடிக்கும். ஒரு சிலருக்கு சினிமாவா அது எல்லாம் எவன் பார்ப்பான் என்று சொல்லுவார்கள். சினிமா பார்ப்பதற்க்கு பிடிக்கும் என்று சொல்லுபவர்களுக்கு சுக்கிரனோடு சந்திரன் சேர்ந்து இருக்கின்றது அர்த்தம்.

இன்றைய காலத்தில் மால்களில் படம் பார்க்க அதிக பேர் ஆசைப்படுகின்றார்கள் அல்லவா. அவர்களுக்கு எல்லாம் சுக்கிரன் சந்திரனோடு இணைந்து இருக்கும் என்று சொல்லுவதை விட சுக்கிரனின் வீட்டிற்க்கு சந்திரன் செல்லும்பொழுது நடக்கும்.

சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து ஜாதகத்தில் இருக்கும்பொழுது அவர்கள் வாழ்க்கை பெரும்பாலும் ஆடம்பரமான ஒரு வாழ்க்கையாக இருக்கும். ஒரு சிலருக்கு வாழ்க்கை அப்படி அமையவில்லை என்றாலும் தன்னுடைய உடை பாவனையில் ஆடம்பரத்தை காட்டுபவர்களாக இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 1, 2016

குருவின் பார்வை


ணக்கம்!
          குருவின் பார்வை மறைவு ஸ்தானத்திற்க்கு கிடைத்தால் என்ன ஆகும் என்று ஒரு சில ஜாதகங்கள் எழுத தூண்டியது. குருகிரகம் சுபகிரகம். சுபகிரகத்தின் பார்வை சுபவீட்டிற்க்கு கிடைத்தால் தான் நல்லது.

சுபகிரகத்தின் பார்வை சுபவீட்டிற்க்கு கிடைக்காமல் மறைவு ஸ்தானத்திற்க்கு கிடைத்தால் இருக்கின்ற நல்வாய்ப்பும் இல்லாமல் சென்றுவிடும். சுபகிரகத்தின் பார்வை கிடைக்கும்பொழுது அந்த ஸ்தானம் பலம் பெறுவதற்க்கு பதில் பலம் குறைந்துவிடும்.

மறைவு ஸ்தானம் எப்பொழுதும் நல்ல பலத்தோடு இருப்பது நல்லது. மறைவு ஸ்தானத்திற்க்கு குரு பார்வை கிடைக்கும்பொழுது ஒரு சில நன்மை நடக்கும். மறைவுஸ்தானத்தில் உள்ள விசயத்திற்க்கு கடுமை இல்லாமல் எளிமையாக இருக்கும்.

உதாரணத்திற்க்கு விரைய வீடான பனிரெண்டாவது வீட்டிற்க்கு குருவின் பார்வை கிடைக்கும்பொழுது ஆன்மீகம் வழியாக செலவை வைக்கும். எட்டாவது வீட்டிற்க்கு குருவின் பார்வை கிடைக்கும்பொழுது மரணம் இயற்கையாக இருக்கும் அதாவது எளிதாக இருக்கும்.

குருகிரகத்தின் பார்வை சுப வீட்டிற்க்கு கிடைத்தால் அந்த வீடு புண்ணியம் செய்த வீடாக கருதப்படும். அதன் வழியாக பல நன்மை நடைபெறும். வீணாக மறைவுஸ்தானத்திற்க்கு குருவின் பார்வை கிடைத்துவிடகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


ணக்கம்!
          நண்பர்  சொல்லிருந்தார் சந்திரனை பலப்படுத்த யோக தியானம் செய்யலாம் என்றார். இதுவும் சரியான ஒரு வழிதான் அதே நேரத்தில் உங்களுக்கு யோக தியானம் கூட வேண்டும் என்றாலும் அதற்கும் சந்திரன் வழி செய்யவேண்டும்.

சந்திரனுக்கு முதலில் பரிகாரத்தை செய்துவிட்டு அதன் பிறகு யோக தியானத்தை மேற்க்கொள்ளலாம். பரிகாரத்தை நாங்கள் செய்ய சொல்லுவதே முதலில் கிரகத்தை சாந்தப்படுத்தவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறோம்.

சந்திர கிரகத்தை யோகாவிலேயே சாந்தப்படுத்த முடியும் என்றால் தாராளமாக செய்யுங்கள். ஏதோ ஒரு வழியில் அதனை நாம் செய்துவிட்டால் போதும். கண்டிப்பாக நல்ல வழி நமக்கு பிறக்கும்.

என்னுடைய எண்ணம் என்ன என்றால் இருக்கின்ற பிரச்சினையில் இருந்து தப்பித்து வந்தால் போதும் என்று தான் நினைப்பேன். நீங்கள் எந்த வழியில் முயற்சி செய்து வந்தாலும் நல்லது.

இந்த மாதம் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனை பிராத்தனை செய்து ஆரம்பிக்கிறேன்.  அம்மன் நல்ல ஊக்கத்தை கொடுத்து உங்களுக்கு தேவையான நிறைய தகவல்களை தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு