Followers

Thursday, July 12, 2012

பரிகாரம்

வணக்கம் நண்பர்களே இரண்டு நாட்கள் பதிவு உலகத்திற்க்கே வரமுடியவில்லை எனது வாடிக்கையாளர்களே பார்க்க சென்றதால் பதிவுகள் போடமுடியவில்லை பதிவுக்கு வந்து ஏமாற்றம் அடைந்த நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். 

நமது வாடிக்கையாளர்கள் என்னிடம் பேசுபவர்கள் அனைவரும் பரிகாரம் சம்பந்தமான தகவல்களை தந்தார்கள் அவர்கள் சோதிடம் பார்க்க சென்ற இடத்தில் பல சோதிடர்களும் பரிகாரத்திற்கு குறைந்தது 25000 பணம் கேட்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. நீங்கள் அவ்வாறு போய் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் உங்களிடம் கேட்டுகொள்கிறேன்.

நான் பல இடங்களுக்கு சென்று இருக்கிறேன். நான் ஒரு தொழில்முறை சோதிடர் தான் நான் பரிகாரங்களுக்கு பணம் வாங்குவேன் ஆனால் 25000 கொடுங்கள் என்று கேட்பதில்லை. அவர்கள் எவ்வளவு பணம் தருகிறார்களே அதை வாங்கிகொண்டு வருவேன். இப்பொழுது நான் சென்று வந்த செலவு மட்டும் வாங்குவேன். பரிகாரங்கள் வெற்றி அடைந்தால் அவர்களே தேடி வந்து பணத்தை தருவார்கள்.

வரும் காலங்களில் கூடிய விரைவில் ஒருத்தருக்கு பரிகாரம் என்று நான் செய்தால் அந்த காரியம் வெற்றி அடைந்த பிறகு தான் நான் பணம் வாங்குவது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

கடந்த காலத்தில் நான் செய்த பல பரிகாரங்கள் அவர்கள் கேட்டது நடைபெறவில்லை. இப்பொழுது பல மந்திர சாஸ்திரங்கள் கற்றதால் இப்பொழுது வரும் நபர்களுக்கு நடைபெறுகிறது. போக போக தான் அதுவும் தெரியும். 

இன்றைய காலகட்டத்தில் 25000 பணம் என்பது பெரிய விஷயமாக தெரியாது. 25000 பணத்தை வைத்துக்கொண்டு 1 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டால் பரிகாரம் செய்ய முடியும் என்றால். இந்தியாவில் யாரும் ஏழையே இருக்கமாட்டார்கள். பல விஷயகள் விவாதத்தில் தோற்றுபோகும். 

கடைசியாக உங்களிடம் சொல்லுவது பரிகாரம் என்ற பெயரில் நீங்கள் ஏமாற்றத்தை அடையவேண்டாம் என்று சொல்லுகிறேன். அதைபோல் உங்களை சார்ந்தவர்களிடம் இதனை சொல்லுங்கள். இந்த மக்களை காப்பாற்றுங்கள்.

நமது நண்பர்கள் பல பேரை காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது பதிவு மூலம் நன்றி சொல்லுகிறேன். நன்றி வணக்கம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: