Followers

Saturday, July 14, 2012

தெய்வ சக்தி



வணக்கம் நண்பர்களே! என்னிடம் சோதிட ஆலோசனை கேட்க வருபவர்களுக்கு நான் சொல்லுவது உங்களுக்கு மந்திர வித்தை மூலம் உங்களின் பிரச்சினை சரிசெய்யலாமா என்று கேட்பேன். இதைப் பற்றி புரிந்தவர்கள் உடனே என்னுடைய பிரச்சினையை தீருங்கள் என்று சொல்லுவார்கள். மந்திரங்களை பற்றி தெரியாதவர்கள் அய்யோ வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றுவிடுவார்கள். 

மந்திர வித்தைகள் என்பது நீங்கள் நினைப்பது போல ஏதோ தவறான ஒன்று கிடையாது. அனைத்தும் தெய்வசக்தி தான். ஒருவர் மந்திரங்கள் உருவேற்றுவதற்க்கு ஒரு தெய்வத்தை வைத்துதான் அவர்கள் உருவேற்றுவார்கள். அவர்களுக்கு அந்த தெய்வம் எல்லாவிதத்திலும் உதவி செய்யது கொடுக்கும். 

அந்த தெய்வங்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு வழி தேடுவார்கள் அதுவும் உங்கள் பூர்வ புண்ணியத்தை வைத்து தான் அந்த தெய்வம் வழி செய்து கொடுக்கும். நீங்கள் கேட்டது எல்லாம் அது செய்து கொடுக்காது.

இஷ்டதெய்வத்தை வைத்து தான் அவர்கள் வழிமுறைகளை வழங்குவார்கள். நீங்கள் நினைப்பது போல அவர்கள் உங்களை வசியம் செய்து எல்லாத்தையும் பிடுங்கிவிடுவார்கள் என்று நினைத்தால் அது தவறு. இந்த காலத்தில் வசியம் செய்வது என்பது பெரிய கடினமான ஒன்றாக தான் இருக்கும். 

இஷ்டதெய்வத்தை வைத்து செய்வது உங்கள் வீட்டில் உள்ள குலதெய்வம் உங்களுக்கு துணையாக இருக்கிறதா அப்படி அந்த குலதெய்வம் துணைசெய்யாமல் போனதற்க்கு என்ன காரணம். அந்த குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்க்கு வரவழைப்பது எப்படி அதற்கான வழிமுறைகள் தான் அதில் இருக்கும். உங்கள் வீட்டு குலதெய்வ மூலம் தான் உங்களுக்கு அனைத்து பிரச்சினையும் தீர்ப்பார்கள். இதனை தவறு என்று நீங்கள் நினைக்காதீர்கள். 

நல்ல முறையில் இஷ்டதெய்வத்தை வைத்து பரிகாரம் செய்பவர்கள் உங்கள் வீட்டிற்க்குள் நுழைந்தவுடனே உங்கள் வீட்டில் குலதெய்வம் உங்களுக்கு அருள் கிடைக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடுவார்கள். 

நீங்களும் சோதிடம் படிக்கிறீர்கள் உங்களுக்கும் இந்த தெய்வ சக்தியை பற்றி தெரிந்திருக்கும் அல்லது தெரியாமல் இருக்கலாம் உங்களுக்கு இந்த பயிற்சியை நான் நேரம் வரும் போது உங்களுக்கு சொல்லி தருகிறேன் அதனை வைத்து நீங்களும் பிறர்க்கு அல்லது உங்களுக்கு நல்லது செய்து கொள்ளலாம். நல்ல முறையில் தெய்வசக்தியோடு முன்னேற்றம் அடையலாம். 

தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் பின் தங்கிய நிலைக்கு நீங்கள் செல்லவேண்டாம். இஷ்டதெய்வம் உங்களுக்கு பரிச்சயம் ஆகிவிட்டால் ஏழரை சனி,அஷ்டமசனி, ஆறாவது வீட்டு தசா கெடுதல் பலன் இது எல்லாம் உங்களை ஒன்றும் செய்யாது. அனைத்திலும் உங்களை இஷ்டதெய்வம் காத்து நிற்கும். இது அனுபவ உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

Unknown said...

nala vazhi katiuleergal please teach us quickly