Followers

Tuesday, July 31, 2012

நரிப்பாறை



வணக்கம் நண்பர்களே கடந்த இரண்டு நாட்களாக பதிவு போடவில்லை பதிவுக்கு வந்து ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் மன்னிக்கவும் நான் வெளியூர் சென்றுவிட்டதால் பதிவை போடமுடியவில்லை.

ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகில் இருக்கும் திருவண்ணாமலை என்ற ஊரில் அந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. அந்த இடத்தின் பெயர் நரிபாறை. அந்த இடத்தில் ஒன்பது ஜீவ சமாதி அமைந்துள்ளது. 

குகையில் இரண்டு சமாதி அமைந்துள்ளது அங்கு சென்று அமர்ந்தால் மனம் நல்ல விதமாக இருக்கிறது.மனத்திற்க்கு நன்றாக இருக்கிறது.

அந்த குகை கோயில் உள்ளே ஒரு குகை செல்கிறது அதில் நெய்தீபம் ஏற்ற சொன்னார்கள் அந்த நெய்தீபம் அணையாமல் எரியவேண்டுமாம் அப்பொழுது தான் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும் என்று சொன்னார்கள். நான் ஏற்றினேன். தீபம் நன்றாக எரிந்தது. 

அதன் பிறகு அங்கு மலையில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் (நின்ற கோலத்தில்) இருக்கிறார் அவரை தரிசித்து விட்டு மீண்டும் நரிபாறைக்கு   சென்று தரிசித்தோம்.


அங்கு நித்தியானந்த சுவாமிகள் சமாதி மீது சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து உள்ளார்கள்  நீங்கள் போனால் அங்கு சென்று தியானம் செய்யுங்கள். நல்ல அனுபவம் கிடைக்கும். ஸ்ரீதர் சுவாமிகள் குகையில் இருக்கிறார் அவர் முன்பு நாகர் சிலை வைத்துள்ளார்கள்.

நீங்களும் அங்கு சென்றால் தரிசனம் செய்து விட்டு வாருங்கள். என்னிடம் கேமரா கிடையாது. வேறு தளத்தில் இருந்து இந்த படத்தை எடுத்து போட்டுள்ளேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: