Followers

Thursday, July 19, 2012

பூஜை அறை



வணக்கம் நண்பர்களே நான் பல வீடுகளில் சோதிடம் பார்க்க செல்லும் போது அவர்களின் பூஜையறையை பார்க்க சொல்லுவார்கள். நானும் போய்  அவர்களின் பூஜை அறையை பார்ப்பேன் அப்பொழுது அவர்களின் வசதிக்கு தக்கவாறு பூஜை அறை இருக்கும் சில வீடுகளில் பார்த்தீர்கள் என்றால் அவர்களின் பணத்தின் மதிப்பை பூஜை அறையில் பார்க்கலாம். அந்தளவுக்கு ஆடம்பரமாக வைத்திருப்பார்கள்.

நான் பார்த்த பல வீடுகளில் இவர்கள் எங்கு எல்லாம் கோவிலுக்கு போகிறார்களே அங்கு எல்லாம் இவர்கள் ஒரு சாமி படத்தையும் விடாமல் வாங்கி வந்து மாட்டிவிடுவார்கள். இன்னும் சில வீடுகளில் போய் பார்த்தால் அவர்கள் வீடுகளில் ஏகாபட்ட சிலைகளை வாங்கி வந்து வைத்திருக்கிறார்கள்.

உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். உங்களுக்கு பிடித்த இஷ்டதெய்வத்தின் படம் இருக்கலாம். தேவையற்ற படத்தை மாட்டிவைக்காதீர்கள். எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைவருக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும். அதனால் உங்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. 

சில வீடுகளில் கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வாங்கி வந்து மாட்டிவைக்கிறார்கள் அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.நீங்கள் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள். வீடுகளில் சிலை இருக்ககூடாது. 

பல வீடுகளின் பல சாமி போட்டை வைத்து இருக்கும் வீடுகளில் எந்த ஒரு தெய்வத்தின் அருளும் இருக்கவில்லை. நான் பார்த்த வரையில் குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள். பல வீடுகளை பார்க்கும்போதே குலதெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது. 

குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்றால் உங்களால் முன்னேற்றம் காண்பது என்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும்.

பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அமருங்கள் உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். முதலில் நீங்கள் இதை செய்யும் போது நீங்களே சிரிப்பீர்கள் ஆனால் நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.

பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்பம் நல்ல முறையில் முன்னேற்றம் ஏற்படும்.

அப்புறம் மறந்திடாமல் வீட்டை நன்றாக சுத்தம் செய்து நறுமண வாசனை வரும் படி வைத்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே இன்றே செய்வீர்களா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: