Followers

Thursday, July 26, 2012

குரு பரிகாரம்



வணக்கம் நண்பர்களே நான் சொல்லும் கருத்துகளை ஏற்று உங்கள் அருகில் இருக்கும் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கும் இதை சொல்லுகிறீர்கள் எனும் போது நான் இது நாள் வரை கஷ்டபட்டு எழுதியதற்க்கு நல்ல பலன் இருக்கிறது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.

எனக்கு வரும் Mail களில் எனது நண்பர் இந்த Blog யை பற்றி சொன்னார் இன்று தான் தெரிந்தது அதனால் உங்களை தொடர்பு கொள்கிறோம் என்று சொல்லுகிறார்கள். தெரியபடுத்திய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முடிந்தவரை அடுத்தவர்களுக்கு தெரியபடுத்துங்கள் பல குடும்பங்களில் நெட் பார்க்காதவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு நீங்களே இதனை படித்து சொல்லுங்கள்.

நீங்கள் படித்துவிட்டு அவர்களுக்கு சொல்லும் போது அவர்களிடம் வீண் ஆடம்பரத்தை காட்டிக்கொள்ளாதீர்கள். பல பேர்கள் ஆடம்பரத்தால் சோதிடகலையை இழந்துவிடுகிறார்கள். முதலில் படிக்கும் போது மேதாவி போல் தான் நமது மனத்திற்க்கு தோன்றும். 

நேற்று ஒரு சோதிடர் என்னிடம் பேசினார் அவர் ஜாதகத்தை என்னிடம் கொடுத்து பலன் கேட்டார். அவர் என்னிடம் பேசும் போது அவர் சோதிடர் என்று சொல்லவில்லை அவரைப்பற்றி நான் கேள்விபட்டது உண்டு. அவர் பலனை கேட்டுவிட்டு நீ அப்படி பார்க்ககூடாது இப்படி பார்க்ககூடாது என்று வீண்வாதம் செய்தார். நான் எவ்வளவு பெரிய ஆள் என்று வேற கூறினார். 

உண்மையில் இவர்கள் எல்லாம் இப்படி சொன்னால் ஒவ்வொரு கிரகம் இப்படி வேலை செய்கிறது இந்த இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்தவன் எப்படி இருந்திருக்க வேண்டும். ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் சோதிடம் பார்ப்பன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் பெரிய ஆள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். நான் விஷயத்திற்க்கு வருகிறேன்.

ஆறாம் வீட்டு தசாவில் அடுத்து நாம் குரு பகவானுக்கு உரிய பரிகாரத்தை பார்க்கலாம். குரு பகவான் ஆறாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்று பார்ப்போம்.

ஆறாம் வீட்டில் சுபர் அமர்ந்தால் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவார். குரு பகவான் ஒரு சுபகிரகம் அவர் ஆறில் அமரும் போது அவரின் தீமைகளை குறைப்பதற்க்கு  பிராமணர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் நீங்கள் மந்திரங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் அவர்கள் உடனே உங்களுக்கு தெரியபடுத்த மாட்டார்கள் நீங்கள் கஷ்டபட்டு அவரிடம் அனுமதி வாங்கி கற்றுக்கொள்ளுங்கள்.

மதகுருமார்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பிராமணர்கள் இல்லை என்றால் உங்களுக்க யார் குருவாக தெரிகிறார்களோ அவர்களிடம் போய் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு கலையை யார் கற்று தருகிறார்களோ அவர்கள் தான் உங்களுக்கு குரு பகவான்.

அனைவரும் மேலே சொன்ன விஷயத்தை கடைபிடிப்பது கடினம் அதாவது அந்த மாதிரி தொடர்புகள் ஏற்படுவது கடினமாக இருக்கும். அதற்காக ஒரு எளிய பரிகாரத்தை தருகிறேன்.

வியாழக்கிழமை அன்று ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு சென்று தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். தயிர் சாதத்தை தினமும் நீங்களும் சாப்பிடுங்கள். குருவுக்கு இது நல்ல பரிகாரமாக இருக்கும்.

உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றும் என்னடா இது எல்லாம் ஒரு பரிகாரமா இது எல்லாம் நடக்கும்மா என்ற எண்ண தோன்றும் ஏன் என்றால் மனிதனின் மனது எதையும் அனுபவித்தால் ஒழிய மனது நம்புவது கிடையாது. அனுபவித்து தெரிந்த பிறகு இதிலும் ஏதோ ஒன்று உள்ளது என்று நினைக்க தோன்றும். நீங்கள் செய்யும் போது நல்ல நம்பிக்கையுடன் செய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு பலன் கிடைக்கும். 

ஒவ்வொரு கிரகத்திற்க்கும் பல பரிகாரம் இருக்கிறது அது ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு வேறுபடும். நான் கொடுக்கும் பரிகாரம் பொதுபரிகாரம் தான் முடிந்தவரை எளிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை தருகிறேன். உங்களுக்கு சரியான பரிகாரம் உங்கள் ஜாதகத்தை பார்த்து தான் தெரியும்.  உங்களுக்கு தகுந்த பரிகாரம் வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தை அனுப்பி கேட்டுக்கொள்ளுங்கள்.

பணம் இருப்பவர்கள் கட்டண சோதிடத்திற்க்கு வந்துவிடுங்கள். உங்களிடம் உண்மையில் பணம் இல்லை என்றால் இலவச சோதிடத்திற்க்கு வாருங்கள். ஆலோசனை தருகிறேன்.

ஒரு சில பேருக்கு நாம் என்ன சொன்னாலும் அவர்களின் கர்மபலன் பரிகாரம் செய்ய தடை ஏற்படுத்துகின்றது. இந்த வாரத்தில் நான் செய்கிறேன் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அவர்களால் பரிகாரத்தை செய்யமுடியவில்லை அந்த மாதிரி இருப்பவர்கள் உங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை நடத்திவிட்டு பிறகு தொடங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: