Followers

Thursday, September 27, 2012

அன்பான அறிவிப்பு



வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் மட்டும் எழுதிக்கொண்டு இருந்தேன் ஆனால் ஒரு சில காரணங்களுக்காக வேறு பதிவுகளில் ஆன்மிக மற்றும் அதனை சார்ந்த கருத்துக்களை எழுதிகொண்டு இருக்கிறேன். இந்த மாற்றம் ஏன் என்று நீங்கள் நினைக்கலாம். 

ஒரு வேலை இவரும் பணத்திற்க்கு ஆசைப்பட்டு புதிய திட்டம் போட்டுவிட்டார் என்று நினைக்க வேண்டாம். அனைத்தும் இலவச பதிவுகள் தான் என்ன ஒன்று அதனை பொதுவில் வைக்கவில்லை. நான் உங்களுக்கு அனுமதி தந்தால் மட்டுமே படிக்கமுடியும். அனுமதி ஒன்றும் பெரியவிஷயம் இல்லை. எனது நண்பராக ஆகிவிடுங்கள்.

ஏன் இந்த மாற்றம் என்றால் நம்ம சோதிடத்தை மட்டும் எழுதினால் எந்த தொந்தரவும் இருந்து இருக்காது நாம மந்திர அனுபவங்கள் என்ற தொடரை ஆரம்பித்தவுடன் ஏகப்பட்ட தொந்தரவை சந்திக்க வேண்டியதாகிவிட்டது. 

சோதிடத்தைப்பற்றி அந்த பதிவில் எழுதவில்லை என் மனதில் இருந்துக்கொண்டு இருக்கின்ற குப்பைகளை அதில் கொட்டிக்கொண்டு இருக்கிறேன். அந்த குப்பைகள் உங்களுக்கு பயன்படாது. ஒரு சில நண்பர்கள் அந்த குப்பையை தான் எனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். 

வழக்கம் போல் இந்த Blog யில் பதிவு வந்துக்கொண்டு இருக்கும். முதல் இடம் இந்த Blog க்கு மட்டும் தான் தருவேன் அதில் எழுதவில்லை என்றால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள் ஏன் என்றால் அதில் உள்ளவர்கள் எனக்கு நன்றாக தெரிந்தவர்கள். அந்த பதிவுகளில் உள்ள செய்தியை இந்த பதிவில் எழுதினால் வருபவர்களும் வரமாட்டார்கள். அத்தனையும் ஆன்மிக குப்பைகள் நீங்களும் அந்த குப்பையை படிக்க வேண்டும் என்றால் எனது நண்பராக மாறிவிடவேண்டியது தான். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: