Followers

Monday, February 29, 2016

தீர்வு பகுதி 11


ணக்கம்!
          நம்மிடம் வந்து சோதிட அனுபவத்தை கேட்கும் நண்பர்களிடம் நான் சொல்லுவது நான் பலனை சொல்லியுள்ளேன். அந்த பலன் நடக்கிறதா என்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு என்னை தொடர்ந்து வந்து உங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லுவேன்.

நான் சொல்லுகின்ற பலன் அனைவருக்கும் நடந்துவிடாது. ஏன் என்றால் எப்படி தான் நாம் கணித்து சொன்னாலும் ஒரு சில விசயங்களில் காலம் ஏமாற்றிவிடும். ஒரு சில விசயங்கள் மட்டும் தவறாக நடந்துவிடவும் வாய்ப்பு இருக்கும்.

அனைத்து பலனும் பல நண்பர்களுக்கு மிகச்சரியாக துல்லியமாக நடக்கும். அவர்கள் அனைவரும் பல வருடங்கள் என்னை தொடர்ந்து வருபவர்களாக இருப்பார்கள்.

அனைவருடைய ஜாதகத்திலும் ராகு கேது எப்படி இருக்கின்றது என்பதை மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் ஜாதகத்தை எடுத்து ராகு கேது எப்படி அமைந்து இருக்கின்றது தற்பொழுது கோச்சாரப்படி எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். 

ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் ராகு கேது நம்மை ஆட்டிவைப்பதில் பெரும்பங்கு கொள்கிறது. அதனால் ராகு கேதுவை பார்க்க சொல்லுகிறேன். ராகு கேதுவை நாம் கணிப்பதும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.

நாம் எழுதுவது எல்லாம் பொதுப்பலனாக இருக்கும். அவர் அவர்களின் ஜாதகத்தை வைத்து தான் இதனை நாம் அறியமுடியும். நன்றாக அமைந்துவிட்டால் பிரச்சினை இல்லை. நன்றாக அமையவில்லை என்றால் நமக்கு பிரச்சினை மேல் பிரச்சினையை கொடுத்துவிடும். அதனால் அதனை பார்க்க சொல்லுகிறேன்

இன்று வயலூர் முருகனை தரிசனம் செய்ய செல்கிறேன். அதனை முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் நண்பர்களை சந்திக்கவும் முடிவு செய்து இருக்கிறேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: