Followers

Tuesday, February 16, 2016

தீர்வு பகுதி 1


ணக்கம்!
                நேற்று காலையில் வந்த பதிவைப்படித்துவிட்டு ஒரு சில நண்பர்கள் தொடர்புக்கொண்டனர். நேற்று நான் எந்த ஒரு போனையும் எடுக்கவில்லை காலையில் வெளியில் சென்றுவிட்டேன். நம்ம ஆட்கள் இதனை சொல்ல போனை அடி அடி என்று அடிப்பார்கள் என்பதால் அமைதியாக வேறு வேலையை பார்த்தேன். முதல் தீர்வாக ஒன்றை பார்க்கலாம்.

பச்சைப்பரப்புதலை செய்து வாருங்கள் என்று சொல்லிருந்தேன். உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு குலதெய்வ வழிபாடான பச்சைப்பரப்புதலை செய்து வருகின்றீர்களாக என்பதை முதலில் உங்களை நீங்களே கேட்டுபாருங்கள்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்துவந்தாலே ஒரு நல்ல வழியை காட்டும். குலதெய்வ அருள் இருந்தால் குலம் செழிக்கும்.

பல நண்பர்கள் அமாவாசை அல்லது பெளர்ணமி நாட்களில் தொடர்ந்து இதனை செய்து வந்தார்கள். அவர்களின் குடும்பங்கள் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கின்றது.

ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் தெய்வத்தை வணங்குங்கள் என்று தான் சொல்லிருந்தேன். இதனை கூட நீங்கள் செய்யவில்லை என்றால் பிற தெய்வத்தை நீங்கள் எப்படி வணங்குவதற்க்கு நேரம் இருக்கும்.

அடுத்த பதிவில் அடுத்த ஒரு தீர்வை பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: