Followers

Thursday, February 4, 2016

தை அமாவாசை


வணக்கம்!
          தற்பொழுது பார்த்துக்கொண்டு வரும் பாக்கியஸ்தானத்திற்க்கு பரிகாரம் செய்வதற்க்கு ஒரு வாய்ப்பாக தை அமாவாசை வருகின்றது. தை அமாவாசை அன்று நமக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் விலக நம் முன்னோர்களின் ஆசி கிடைக்க பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

நம் முன்னோர்களுக்கு உங்களால் முடிந்த விரதம் அல்லது தர்பணம் அல்லது ஏதாவது ஏழைகளின் குடும்பங்களை வாழ வைக்க உதவுவதும் வழியாக முன்னோர்களின் ஆசியை பெறமுடியும்.

நம் முன்னோர்களின் ஆசியை பெற்றுவிட்டால் இந்த பிறவியை நீங்கள் கடந்துவிடலாம். நம் மதத்தில் முன்னோர்களுக்கு உரிய வழிபாட்டை தான் அதிகம் வைத்திருப்பார்கள். தெய்வங்களை விட முன்னோர்களின் வழிபாடு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.

உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் கூட முன்னோர்களுக்கு செய்வதை நிறுத்திவிடாதீர்கள். இந்த பிறவியை கடக்கவும் முன்னோர்களின் ஆசி அவசியம் தேவைப்படுகிறது. அதற்காகவும் நிறுத்தாமல் செய்யவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: