Followers

Tuesday, February 16, 2016

தீர்வு பகுதி 2


வணக்கம்!
          ஒரு குடும்பத்திற்க்கு என்னை அழைத்து சென்றனர். அவர்கள் நாங்கள் நன்றாக சாமி கும்பிடுகிறோம் ஆனால் நாங்கள் நினைக்கு வாழ்க்கை எங்களுக்கு அமையவில்லை என்று ஆதங்கப்பட்டனர்.

ஜாதகத்தை மீறிய பல செயல்கள் இருக்கின்றன. அதனை நாம் ஜாதகம் பார்த்து தெரிந்துக்கொள்ள முடியாது. அவர்களை பார்த்து தான் நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். கோவிலுக்கு மட்டும் சென்றால் ஒரு சில விசயங்கள் நடந்துவிடாது நம்மையும் நாம் சுயபரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும். நம்மை கொஞ்சம் மாற்றினால் தான் நல்லது நடக்கும்.

அவர்களின் குடும்பத்தில் இருக்கும் நபர் ஐந்து பேர். இந்த ஐந்து பேரும் படுகோபகாரர்கள் ஒருவரிடமும் பொறுமை என்ற குணம் இல்லை. அவர் அவர்களுக்கு கோபபட்டு ஏதாவது செய்துக்கொண்டு இருப்பார்கள்.

கோபபட்டு அடித்துக்கொள்வது கிடையாது. ஏதாவது பொருட்கள் மேல் காட்டிக்கொள்வது, என்ன இந்த சனியன் இப்படி செய்கிறது என்று ஏதாவது பொருட்கள் மீது காட்டுவது அவர்களி்ன் குணமாக வைத்து இருந்தனர். 

பொறுமை என்ற ஒன்று இருந்தால் ஜாதகத்தில் இருக்கும் பல நல்ல விசயங்கள் நடைபெறும். பொறுமை இல்லை என்றால் என்ன தான் கோவில்களை கும்பிட்டாலும் நல்ல பலனை எதிர்பார்க்கமுடியாது. உங்களின் குடும்பத்தில் இப்படி இருந்தால் அதனை மாற்றிக்கொள்ளுங்கள். நல்ல காலம் விரைவில் பிறக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: