Followers

Monday, February 15, 2016

புண்ணியம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் எனக்கு பிரச்சினை கொடுக்க நான் விடுவதில்லை அதற்கு காரணம் நான் செய்யும் தான தர்மம் போன்ற பாக்கியஸ்தானம் சம்பந்தப்பட்ட விசயமாக அதிகம் இருக்கும்.

பொதுவாக ஒரு காரியம் நடைபெறவேண்டும் என்றால் அதற்கு நான் முன்கூட்டியே பல நல்ல காரியத்தை செய்துவிடுவேன். என்னிடம் பரிகாரம் செய்யும் நபர்களுக்கு கூட அவர்களிடம் இருந்து பணத்தை அல்லது பொருளை வாங்கி கோயில் ஏதாவது ஒரு புண்ணியகாரியத்திற்க்கு கொடுத்துவிட்டு தான் செய்வேன்.

என்னுடைய வருமானத்தில் கூட பல நல்ல காரியங்களுக்கு செய்துவிடுவது உண்டு. இது எல்லாம் எனக்கு குரு கற்றுக்கொடுத்த பாடமாக இருப்பதால் அதனை அப்படியே பின்பற்றி வருகிறேன்.

உங்களுக்கும் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் நீங்களும் இப்படி செய்துக்கொள்ளலாம். வாழ்க்கை முழுவதும் உங்களிடம் இந்த செயல் இருந்தால் எந்த ஜென்மத்திற்க்கும் பாக்கியஸ்தானம் குறை வைக்காது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: