Followers

Friday, February 5, 2016

புண்ணியகாரியம்


ணக்கம்!
           பாக்கியஸ்தானத்தில் பத்தாவது வீட்டு அதிபதியோடு சம்பந்தம் ஏற்படும்பொழுது எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை பார்த்தோம். மேலும் ஒரு சில தகவல்களை அதனைப்பற்றி பார்க்கலாம்.

ஒரு சிலர் சம்பாதித்த பணத்தைக்கொண்டு ஏதாவது டிரஸ்ட் அமைத்து அதன் வழியாக மக்களுக்கு நல்லதை செய்துக்கொண்டே இருப்பார்கள். பல இடங்களில் நீங்கள் இதனை பார்த்து இருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.

பிறர் பணத்தை வாங்காமல் தன்னுடைய சம்பாதித்த பணத்தை எல்லாம் பிறர்க்கு உதவி செய்ய நினைப்பார்கள். அவர்களுக்கு தொழிலும் நன்றாக இருக்கும். அவர்கள் வழியாக ஏழை மக்களும் பயன்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

பொதுவாகவே ஒரு தொழில் செய்தால் அதன் வழியாக பல பேர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுவே ஒரு புண்ணிய செயல் தான். ஒன்பதாவது வீடும் பத்தாவது வீடும் சம்பந்தம் ஏற்பட்டால் நல்லதை செய்வார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: