Followers

Monday, December 3, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
          புயல் காரணமாக இதுவரை மின்சாரம் வரவில்லை. தொடர்ந்து பதிவை தந்துவிடுகிறேன். நகர்புறங்களில் ஒரு சில இடத்தில் மின்சாரம் வந்திருக்கின்றது. பிரவுசிங் சென்டரில் இருந்து பதிவை தந்துவிடுகிறேன். 

புயல் நிவாரணத்திற்க்கு பலர் தங்களின் பங்களிப்பை அளித்து இருந்தனர் அனைவருக்கும் நன்றி. பல நல்ல உதவிகளை நான் மக்களுக்கு செய்து இருக்கிறேன். பல ஊர்களுக்கு என்னால் நிவாரணப்பொருட்களை அனுப்பமுடிந்தது. 

வெளியூர் நண்பர்களின் உதவியோடு பல இடங்களுக்கு தன்னுடைய வழிகாட்டி வழியாக உதவி சென்றடைந்தது. அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல நண்பர்கள் புயல் அடிக்கும்பொழுது அதன் அனுபவங்களை எழுத சொல்லிருந்தனர் அவ்வப்பொழுது அதனையும் சொல்லுகிறேன்.

தொடர்ச்சியாக பூஜைகள் நடந்துக்காெண்டு இருக்கின்றன. ஜாதக பலன் மட்டும் பார்க்க ஆரம்பிக்கவில்லை. மின்சாரபிரச்சினை காரணமாக தான் அதனை தள்ளிவைத்து இருக்கிறேன். விரைவில் அனைத்தும் சரியாகும்.

அம்மன் கோவிலும் புயலால் மரக்கிளைகள் பாதிப்படைந்து இருக்கின்றன. ஓட்டு கொட்டகைகளில் ஒரு சில ஓடுகள் பாதிப்படைந்து இருக்கின்றன. அதனை எல்லாம் சரி செய்துவிடுவோம். 

விரைவில் அம்மன் பூஜை நடைபெற இருக்கின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வையுங்கள். கட்டண பதிவிலும் தொடர்ச்சியாக பதிவுகள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: