Followers

Friday, December 14, 2018

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
          ஒருவருக்கு ஏக்கம் அதிகமாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அனைவருக்கும் ஒன்று கிடைத்து அது எனக்கு மட்டும் கிடைக்காமல் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அதனைப்பற்றிய எண்ணம் அதிகமாக அதிகமாக உருவாகி அது ஆத்மாவிற்க்குள் சென்றுவிடும். இது வாழ்நாளில் கடைசி வரை கிடைக்கவில்லை என்றால் ஆத்மா கடுமையான ஏக்கத்தோடு உயிர் விடும்பொழுது அது மறுபடி பிறந்து அதனை அடையும் வரை போராடும்.

உங்களுக்கே ஒரு ஏக்கம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த ஏக்கத்தை ஒரு நாள் கண்டிப்பாக நீங்கள் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். அது தவறு சரி என்பதை காட்டிலும் ஒரளவு நியாயமாக இருக்கும்பட்சத்தில் அதனை எப்படியாவது நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

மனிதன் ஆசைப்படுவது இயல்பு ஆனால் ஏதோ ஒன்றின் மீது அதிகமான ஈடுபாடு இருக்கும் அல்லவா. இந்த ஈடுபாட்டை வாழ்நாளில் ஒரு நாள் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். ஆசை அனைத்திலும் வைப்போம் ஆனால் ஏதாே ஒன்று அதிகமான ஆசை இருக்கும் அல்லவா அதனை நிறைவேற்றிவிட்டால் கண்டிப்பாக உங்களுக்கு பிறக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய்விடும். 

எனக்கும் நிறைய ஈடுபாடு இருந்தது அதனை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன். உங்களின் ஈடுபாட்டையும் நீங்கள் நிறைவேற்றிக்கொண்டுவிட்டால் உங்களுக்கும் அது நல்லதாக இருக்கும்.

பலர் வெட்கப்பட்டு வயது ஆனவுடன் இதனை எங்கு செய்வது என்று விட்டுவிடுபவர்களும் இருக்க தான் செய்கின்றனர். வெட்கப்பட்டு இருக்க வேண்டியதில்லை உங்களின் ஆத்மாவிற்க்குள் உள்ள விசயத்திற்க்கு நீங்கள் செய்கின்றீர்கள் என்று நினைத்துக்கொண்டு செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: