Followers

Thursday, December 27, 2018

நவ அம்மன் (சண்டி) யாகம்



வணக்கம்!
          ஒருவருக்கு பாதிப்பு வருகின்றது என்றால் அது கர்மா என்று தான் சொல்லுவோம். கர்மாவை நீக்க அவர் அவர்களுக்கு தெரிந்த விசயங்களை செய்துக்கொண்டு இருக்கின்றனர். நம்முடைய ஜாதககதம்பம் படிக்கும் அனைவரும் ஏதோ வகையில் ஆன்மீகவாதிகளாகவே இருக்கின்றனர்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆன்மீகவாதியாக இருக்கமுடியாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் ஆன்மீகவாதியாக இருக்கமுடியும் அவர் தான் அந்த குடும்பத்திற்க்கு தேவையான ஆன்மீக வழியில் உள்ள விசயங்களை செய்து அந்த குடும்பத்திற்க்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

நமஅம்மன் யாகமும் ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் தேவையான ஒன்று தான். இதனை தனிநபர் ஆண்டுக்கு ஒருமுறையாவது தனியாக செய்யுங்கள் என்று சொல்லுவது உண்டு. தனிநபர் செய்யமுடியாதவர்களுக்கு பொதுவான நவஅம்மன் யாகத்தை செய்துக்கொண்டு வருகிறோம்.

நவஅம்மன் யாகம் செய்யும்பொழுது ஒவ்வொருவரும் தங்களுடைய இணைப்பை இணைத்துவிடுகின்றனர் அது நல்லது தான் அதனை தொடர்ந்து செய்துக்கொண்டே இருங்கள் என்று சொல்லுகிறேன். நவஅம்மன் யாகம் செய்யும் அனைவரும் பங்களிப்பை அளிக்கும்பொழுது கண்டிப்பாக உங்களின் வாழ்வில் முன்னேற்றம் என்பது நடந்தே தீரும்.

நவஅம்மன் யாகத்திற்க்கு அனைவரும் தங்களுடைய பெயர் மற்றும் நட்சத்திரம் அதோடு உங்களுடைய வாட்ஸ்அப் எண்ணை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: