Followers

Wednesday, December 26, 2018

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
          ஒருவரின் வீட்டிற்க்கும் அவர்களுக்கு வரும் நோய்களுக்கும் நிறைய சம்பந்தம் வரும். வீட்டின் அமைப்பு என்ற ரீதியில் நான் சொல்லவில்லை. ஒரு வீட்டிற்க்குள் நுழையும் தீயசக்திகளின் வழியில் இது வருகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பழைய காலத்தில் நோய்க்கும் பேய்க்கும் மருத்துவம் பார்க்கவேண்டும் என்று சொல்லிருக்கிறார்கள். தற்காலத்தில் நோய்க்கு மட்டும் வைத்தியம் பார்க்கிறார்கள் பேய்க்கு பார்ப்பதில்லை என்பதை சொல்லி தான் ஆகவேண்டும். 

தீயசக்திகள் அல்லது எதிர்மறையான ஒரு விசயம் உள்ளே நுழைகின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த விசயம் தான் ஒருவரை திடீர் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இதனை உங்களிடம் சொல்லும்பொழுது இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது ஆனால் ஆன்மீகத்தில் இது உண்மை என்று சொல்லலாம்.

பெரும்பாலான இடத்தில் இந்த வீட்டில் உள்ளவர்க்க்கு நோய் தாக்குதல் வரப்போகின்றது என்பதை எனக்கு பெரும்பாலும் ஒரு மாதத்திற்க்கு முன்பே தெரிய வருகின்றது. ஒரு மாதத்திற்க்கு பிறகு அந்த வீட்டில் உள்ளவர் ஒருவர் நோய்வாய்ப்படுகின்றார்.

நோய்க்கு ஆன்மீகத்தில் செய்வது என்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். நிறைய போராட்டம் செய்து இதனை நாம் செய்யவேண்டியிருக்கும். தாக்கும் சக்திக்கும் நமக்கும் நிறைய போராட்டம் இருக்கின்றது அதனை எல்லாம் சமாளித்து வரும்பொழுது தான் நோயாளிக்கு சரியான தீர்வு கிடைக்கும்.

இதனை தடுப்பது என்பது உங்களின் தொடர்ச்சியான வழிபாடு தான் இதனை தடுக்கும். பெரும்பாலும் அம்மன் வழிபாடு இதனை நன்றாகவே தடுகின்றது இதனை அனைவரும் செய்து நல்ல வழியை தேடிக்கொள்ளலாம். வாஸ்துபடி இதனை சொல்லவில்லை என்பதையும் அறியவேண்டும். வாஸ்துக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: