Followers

Tuesday, December 4, 2018

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
          பழைய பதிவுகளை படித்துவிட்டுக்கொண்டு நமது நண்பர்கள் இருக்கின்றனர். அதனை படித்துவிட்டு அதுபோல பதிவுகளை தாருங்கள் என்று நண்பர்கள் கேட்கின்றனர். உங்களுக்கு அதுபோல பதிவுகளை தருவதற்க்கு முயற்சிகளை மேற்க்கொள்கின்றேன். 

ஆன்மீக அனுபவங்கள் பதிவுகள் மற்றும் பூர்வபுண்ணியபதிவுகள் அதிகமாக தாருங்கள் என்று கேட்கின்றனர் நான் முடிந்தவரை முயற்சி செய்து உங்களுக்கு பதிவுகளை தருகிறேன். ஜாதக கதம்பம் பழைய பதிவுகள் போலவே மறுபடியும் உங்களுக்கு இருக்கும்.

புயல் அடித்தபொழுது நான் கண்டவரை ஒரளவு ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன. மற்றவரை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கின்றன.

புயல் அடித்தப்பொழுது பெரிய பாதிப்பு இருக்கும் என்று நினைத்து இருந்தேன். ஒரு அவசர நிலை ஏற்பட்ட உணர்வை தந்தோடு சரி பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை. புயல் மட்டும் இல்லை பல ஊர்களில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இதனை பார்த்து எழுதுகிறேன்.

ஆன்மீகத்தில் இருந்தாலும் நாம் கொஞ்சம் நேர்மறையான கருத்துக்கள் உடையவராகவும் இருக்கும்பொழுது மட்டுமே நமக்கு நடக்கும் அனைத்திலும் நாம் தப்பிக்கலாம். இதனை அனைவரும் கடைபிடியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: