Followers

Wednesday, December 12, 2018

கர்மா


வணக்கம்!
          புயல் அடித்தபிறகு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு நீங்கள் எங்களின் ஊருக்கு வந்துவிடுங்கள் இங்கு தங்கிக்கொள்ளலாம் என்று கேட்டார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டேன்,

காரணம் என்ன என்றால் ஒரு பாதிப்பு என்பது ஏற்பட்டுவிட்டால் அது நமது கர்மாவால் வந்தது என்று அர்த்தம். தனிநபருக்கும் கர்மா இருக்கும் ஊருக்கும் கர்மா இருக்கும் நாட்டிற்க்கும் கர்மா இருக்கும். ஏன் இந்த உலகமே இயங்குவது கர்மா என்ற ஒன்றால் தான் இயங்குகின்றது.

என்னுடைய கர்மாவை அனுபவிக்க இந்த ஏற்பாடு என்று எடுத்துக்கொண்டு அதனை ஏற்றுக்கொண்டு இங்கேயே இருந்துவிட்டேன். பலர் கூப்பிட்டும் நான் வெளியில் செல்லவில்லை. கர்மாவையும் அனுபவித்துவிட்டேன்.

வாழவே முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு நமது உயிருக்கு பாதிப்பு வரும் நிலையில் இருக்கும்பொழுது வேண்டுமானால் அதனை விட்டு விலகலாம். அது கூட தவறு தான் ஆனாலும் எல்லா உயிர்களுக்கும் இருக்கும் உயிர் பயத்தால் வேண்டுமானால் விலகி ஓடலாம்.

ஊரில் இருந்து முடிந்தளவுக்கு கர்மாவை அனுபவித்துவிட்டேன். இந்த கர்மாவை அனுபவித்த காரணத்தால் நல்ல ஒரு தெளிவு எனக்குள் ஏற்பட்டது. இதனைவிட மிகப்பெரிய ஒரு வரம் என்று சொல்லும் அளவுக்கு வாய்ப்புகள் வருகின்றன.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: