Followers

Monday, December 17, 2018

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
         ஒரு நண்பர் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார். நான் ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருக்கின்றேனா அல்லது நல்ல நிலையில் இல்லையா என்பதை எப்படி அறிவது என்று கேட்டு அனுப்பியிருந்தார்.

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையில் இருக்கிறேன் அல்லது இல்லை என்பது எல்லாம் தாண்டி கலியுகத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பதே பெரிய விசயமாகவே நான் கருதுகிறேன். இன்றைய காலத்தில் இருக்கும் பிற விசயங்களை எல்லாம் தாண்டி ஆன்மீக பக்கம் செல்வதே நீங்கள் நல்ல ஒன்றை தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்ற அர்த்தம் கொள்ளவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் எல்லாம் தோன்றும். நான் ஆன்மீகத்தில் இருக்கிறேன் என்றால் எனக்கு ஒரு விதமான உணர்வுகளை கொடுத்து சக்தியை காட்டிக்கொடுக்கும். பிறர்க்கு வேறு ஒரு மாதிரியான உணர்வுகளை அல்லது ஏதோ ஒன்றை காட்டிக்கொடுக்கலாம். ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் இருக்கின்றது என்பது தெரிகிறது.

பொதுவாக ஒரு சில அறிகுறிகளை நாம் தெரிந்துக்கொள்ளலாம். முதலில் இரவு நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் பெரும்பாலும் ஆன்மீகம் சம்பந்தபட்டவையாக வந்தால் ஒரளவு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கின்றது என்று அர்த்தம். ஒரு சிலருக்கு பகலில் நம்முடைய எண்ணத்திற்க்கு தகுந்தமாதிரியான விசயங்களை தான் கனவாக வரும் என்று கேள்விபட்டு இருக்கலாம். அதனையும் தாண்டி எதனையும் சிந்திக்காத நாளில் ஆன்மீக கனவுகள் வரவேண்டும்.

முதலில் உங்களின் உணர்வுகளின் வழியாக காட்டிக்கொடுப்பது அடுத்தது கனவுகள் வழியாக காட்டிக்கொடுப்பது இருக்கவேண்டும். கனவுகளில் நீங்கள் பறப்பது போல இருந்தால் நல்ல நிலை என்று அர்த்தம் கொள்ளலாம். 

முக்கியமாக உங்களின் ஆத்மா நல்ல நிலையில் இந்த இருக்கின்றது என்பதை நீங்கள் காணும் கனவு கலர் நிறத்தில் வரவேண்டும். பிளாக் & அண்டு ஒயிட்டில் கனவு வந்தால் நீங்கள் சரியில்லாத நிலையில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

முதலில் உங்களுக்கு வரும் கனவு எப்படி வருகின்றது என்பதை அடையாளம் காண்பதற்க்கே உங்களுக்கு புரிந்து இருக்கவேண்டும். எல்லாேரும் நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் நமக்கு கலராக தான் கனவு வருகின்றது என்று நினைப்பீர்கள். லட்சத்தில் ஒருவருக்கு கலராக கனவு வரும். கலர் கனவுகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் ஒரு சிறந்த ஆன்மீக நிலையில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

முதலில் உங்களுக்கு கலர் கனவாக வருகின்றதா அல்லது பிளாக்  & அண்டு ஒயிட்டில் வருகின்றதா என்பதை அறிய முயலுங்கள் அதன் பிறகு ஆன்மீகம் எப்படி இருக்கின்றதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: