Followers

Tuesday, December 11, 2018

நன்றி


ணக்கம்!
          நேற்று இரவு முதல் மின்சாரம் வந்தது. இரவில் மட்டும் மின்சாரம் வருகின்றது. இது வந்ததே மிகப்பெரிய நல்லது. இனிமேல் தொடர்ச்சியாக  அதிகமான பதிவுகளை உங்களுக்கு தந்துவிடுகிறேன். புயலால் பல மாற்றங்கள் நடந்தது அதனைப்பற்றி எல்லாம் வரும் பதிவுகளில் எல்லாம் சொல்லுகிறேன்.

அம்மன்பூஜைக்காக நிறைய வேலைகளை செய்யவேண்டியிருக்கின்றது. அதற்கான வேலைகளை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அம்மன்பூஜை நடைபெறும். 

புயல் நிவாரணத்திற்க்கு என்று உதவிய அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன். வெளிமாவட்டங்களில் இருந்து புயல் பாதித்த பகுதிக்கு உதவியை செய்தார்கள் அல்லவா அவர்களால் தான் இந்த பகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் பயன்பட்டார்கள்.

அரசாங்கத்திடம் மட்டும் மின்சார உதவியை தான் மக்கள் எதிர்பார்த்தார்கள். முடிந்தளவுக்கு வெளிமாவட்டத்தில் உள்ள மக்கள் உதவி செய்ததை நமது பதிவில் வழியாக சொல்லவேண்டும் என்பதற்க்காக தான் இந்த பதிவை தருகிறேன்.

ஒவ்வொரு பகுதிக்கும் வெளிமாவட்டத்தில் இருந்து நிறைய நிவாரணங்களை அனுப்பி இங்குள்ள மக்களை காப்பாற்றினார்கள் அதற்கும் நன்றி. நீங்கள் அனுப்பிய பணத்தை வைத்து என்னாலும் உதவி செய்யமுடிந்தது. அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: