Followers

Wednesday, June 20, 2012

வில்லாதி வில்லன் 9



வணக்கம் நண்பர்களே! ஆறாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் என்ன பலன் என்று கடந்த பதிவில் பார்த்தோம் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம். 

ஆறாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் கடுமையான அவமானம் ஏற்படும். அதனாலே தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வரும். அதே பொருட்கள் திருட்டு போகும். விபத்துகளும் ஏற்படும். 

நாம் உங்களை ஆறாம் அதிபதியின் தசாப்பற்றி சிந்திக்க சொன்னேன். யாரும் சிந்திப்பது மாதிரி தெரியவில்லை ஒரு நண்பர் மட்டும் எனக்கு பல பேர்களில் தகவல் கேட்டு அனுப்புகிறார். அவருக்கு மட்டும் தான் சோதிடத்தில் விருப்பம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவரை பாராட்டுகிறேன் அவருக்கு நல்ல சோதிட தாகம் இருக்கிறது. பல பேர் படிக்கிறார்கள் ஆனால் எந்த தகவலும் தருவதில்லை.

நான் ஆறாம் வீட்டுகே வருகிறேன். இந்த அளவிற்க்கு ஆறாம் வீடு ஒருவரை தாக்குவதற்க்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். நான் தேடியவரையிலும் எனக்கு கிடைத்த தகவல்கள் ஒருவர் முன்ஜென்மத்தில் செய்த குற்றங்களினால் ஏற்படுகின்றது என்று கிடைத்தது. 

ஒருவர் முன்ஜென்மத்தில் செய்த ஒருவர் ஒருவனை ஏதோ காரணத்தினால் தாக்கி இருக்கலாம் அல்லாது ஒருவனை கொலை செய்து இருக்கலாம். அதனின் கர்மாதான் இந்த ஜென்மத்தில் தாக்கிறது என்று சொல்லி உள்ளார்கள்.  ஒருவன் செய்த சண்டையால் தான் ஆறாம் அதிபதி தாக்குகிறார் என்று சொல்லுகிறார்கள். நானும் அதை தான் நினைத்து உள்ளேன். 

ஒவ்வொரு வீட்டிற்க்கும் என்ன காரணம் இருக்கிறது என்று தெரியும் அதை எல்லாம் நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

இதை தான் கர்மா பலன் என்று சொல்லுகிறார்கள். கர்மாவின் தாக்கம் குறையுமா என்று பார்ப்பதற்க்கு அம்சத்தில் அந்த கிரகம் பலன் பெற்றால் குறைவதற்க்கு அதாவது பரிகாரம் செய்து குறைக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆறாம் வீட்டு அதிபதி தாக்குவது எல்லாம் பார்த்தீர்கள் என்றால் திடீர் என்று தான் தாக்கும் பெரும்பாலும். ஆமா கொலை செய்பவன் திடீர் என்று தான் கொலை செய்வார்கள். சொல்லிவிட்ட கொலை செய்வார்கள்? திடீர் என்று நடப்பதால் தாக்கபடுபவனுக்கு ஒன்றும் புரிவதில்லை எங்கு இருந்து வருகிறது என்று கூட தெரிவதில்லை. 

உங்களுக்கு ஆறாம் வீட்டு தசா நடந்தால் நிறைய தானம் செய்யுங்கள் அது உங்களை காப்பாற்றும். பல தானம் செய்வதால் தான் இந்த மாதிரி தசா நடந்தால் உங்களை அந்த புண்ணியம் காப்பாற்றும்.

ஆறாவது அதிபதியை பொருத்து தாக்குதல் இருக்கும். ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொன்றாக பரிகாரம் இருக்கும் அது எல்லாம் நாம் அவ்வப்போது பார்க்கலாம்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.


நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: