Followers

Sunday, June 17, 2012

அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே!  நாம் இலவச சோதிட சேவை செய்வது அனைவரும் அறிந்ததே அதில் உங்கள் ஜாதகத்தை அனுப்பி கேளுங்கள் பதில் தருகிறேன். இலவச சோதிட சேவையில் உங்கள் குடும்பத்தினர் ஜாதகத்தையும் அனுப்புங்கள் பதில் தருகிறேன் ஆனால் சில நண்பர்கள் ஜாதக பொருத்ததையும் கேட்கிறார்கள் அந்த சேவை செய்ய இயலாது. அவ்வாறு நீங்கள் பொருத்தம் பார்க்க வேண்டு்ம் என்றால் கட்டண சேவையில் வாருங்கள் நான் பதில் தருகிறேன். 

நான் இருக்கும் வேலை பளுவில் ஒருவருக்கு இலவச சோதிட வேவை செய்வது என்பது ஒரு கடினமான வேலை தான். நான் உங்கள் நலம் கருதி உங்கள் குடும்ப ஜாதங்களை எல்லாம் இலவச சோதிடத்தில் பார்த்து பலன் கூறுகிறேன். 

இலவச சோதிட சேவை செய்வது மனம் திருப்தி அடைகிறது அதனால் தான் செய்கிறேன். நீங்கள் இலவச சோதிடம் கேட்கும் போது பாடம் சம்பந்தமாக கேள்வியை கேட்க வேண்டாம் கிடைக்கின்ற நேரத்தில் உங்கள் வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதை மட்டும் கேளுங்கள்.

இலவச சோதிட சேவையில் வருபவர்கள் எனது mail கிடைத்தவுடன் உடனே எனக்கு போன் செய்துவிடுங்கள். நான் சென்னையில் இருக்கும் பட்சத்தில் உங்கள் mail க்கு உடனே நான் பதில் mail செய்துவிடுவேன். நீண்ட நாட்கள் ஆனால் உங்கள் mail யை நான் தேடுவதற்க்கே எனக்கு நேரம் இருக்காது.

இலவச சேவையில் வந்து பார்த்தவர்கள் உங்களுக்கு நான் சொன்ன பலன் நடந்தால் அல்லது உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே கட்டண சேவைக்கு வந்துவிடுங்கள் உங்கள் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும். இதை லாப நோக்கத்தோடு சொல்லவில்லை உங்கள் நலன் கருதி சொல்லுகிறேன்.

நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் என்னுடைய சோதிட வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் தான் அதிகம் இடம் பெற்று இருக்கும் உங்களுக்கு வரும் பதிவுகளில் குறை இருந்தால் அல்லது அவ்வாறு எழுதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே எனக்கு தகவலை அனுப்பி விடுங்கள் நான் அதை மாற்றி உங்கள் எண்ணங்களுக்கு ஏதுவாக அதை தரலாம்.


நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: