Followers

Monday, June 18, 2012

வில்லாதி வில்லன் 7


வணக்கம் நண்பர்களே ஆறாம் வீட்டு தசா வை பற்றி பார்த்து வருகிறோம். நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறேன் உங்களை ஆறாம் வீட்டைப் பற்றி நன்றாக சிந்திக்க சொன்னேன் யாரும் சிந்திக்கவில்லையா அப்படி யாரும் சிந்திருந்தால் எனக்கு தகவலை அனுப்புங்கள்.

என்னிடம் பேசிய நண்பர்கள் மட்டும் தான் தகவலை அனுப்புகிறார்கள். படிப்பவர்கள் அனைவரும் தகவலை அனுப்புமாறு கேட்டு கொள்ளுகிறேன். அப்படி இல்லை என்றால் இது போதும் என்று குறைந்த தகவலுடன் அடுத்த தலைப்பு மாறிவிடலாம். நீங்கள் விருப்பத்துடன் படிக்கிறீர்கள் என்று எழுதி கொண்டு இருக்கிறேன். உங்கள் விருப்புங்களை தெரியபடுத்துங்கள்.

ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருப்பது அல்லது சம்பந்தபட்டு இருந்து தசா நடந்தால் என்ன நடக்கும் என்று பார்த்து வந்தோம் அந்த வகையில் அதே தொடர்கிறது இந்த பதிவில் இந்த மாதிரி அமைப்பு இருந்து இந்த தசா நடந்தால் கண்டிப்பாக அது பொற்காலமாகதான் அமையும் ஏன் என்றால் இது ராஜயோகம் தரும் தசா அமைப்பு.

உங்களுக்கு மாமன் இருந்தால் அவர்கள் உங்கள் மேல் உயிரே விடுவார்கள் அந்தளவு பாசம் இருக்கும். அவர்கள் மூலமாக சொத்து சேரும். உங்கள் குழந்தைகளின் பொருளாதார நிலை உயரும்.  உங்கள் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பணம் சேரும்.

இடம் மாற்றலாகி உயர் பதவி வாய்ப்பும் கிடைக்கும். நீங்கள் எல்லாம் இந்த மாதிரி தசா நடந்தால் அது உங்களுக்கு பொற்காலம் தான். நீங்கள் இளம் வயதில் இருந்து ஏதோ ஒன்று வெற்றி பெறனும் என்று நினைத்து இருந்தீர்கள் என்றால் அது ஏதுவாக ஆனாலும் இருக்கலாம் இந்த மாதிரி உள்ள தசாவில் தொடங்குகள் எளிதாக வெற்றி பெறலாம்.

நாம் எல்லாருமோ ஒரு வியாபாரம் செய்து பெரிய அளவில் வரவேண்டும் என்று நினைத்திருப்போம். எங்காவது கடனை வாங்கி வியாபாரத்தை தொடங்குவோம். அந்த வியாபாரம் படுத்துவிடும் என்ன டா இப்படி நடந்துவிட்டதோ என்று நினைக்க தோன்றும். உண்மையில் ஜாதகத்தில் பார்த்தீர்கள் என்றால் அந்த நேரத்தில் உங்களுக்கு கெடுதல் தரும் தசா நடந்து கொண்டிருக்கும்.

கெடு பலனை தரும் தசாவில் தொடங்கினால் இந்த மாதிரி தான் நடைபெறும். நாம் செயலில் வெற்றி பெறாமல் போவதற்க்கு காரணம் தொடங்கிய தசாதான் பிரச்சினையாக இருக்கும்.

நீங்கள் நினைத்து இருக்கலாம் ஆறாம் வீ்டு என்றாலே பிரச்சினை தான் அதனை கண்டு பயப்பட்டு இருக்கலாம் ஆனால் பாருங்கள் சோதிட சாஸ்திரத்தில் ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்து தசா நடந்தால் அது ராஜயோகத்தை தரும் என்று கூறியுள்ளார்கள்.

நீங்கள் நினைக்கும் அனைத்திலும் வெற்றியை தரும் தசா இதுதான். நீங்கள் சும்மா தொட்டாலே போதும் அந்த செயல் வெற்றியை தரும்.

உங்கள் தந்தையாருக்கு ஏதும் தொழில் இருந்தால் அந்த தொழிலில் அவர் கொடி கட்டும் பறக்கும் காலமாக இருக்கும். அவர் எந்த தொழில் செய்தாலும் அதில் அவர் வெற்றி பெற்றுவிடுவார்.

ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்து தசா நடந்தால் அது ராஜயோகம் தரும் தசா என்கிறோம் அதனால் ஒரு சிக்கலும் உள்ளது என்ன என்றால் களத்திர வீட்டுக்கு அதவாது ஏழாம் வீட்டிற்க்கு ஆறாம் வீடு பனிரெண்டாம் வீடாக வருகிறது அல்லவா ஆறாம் அதிபதி பலம் பெற்று தசா நடந்தால் திருமண வாழ்வில் பிரச்சினை உண்டு செய்துவிடுவார். இருவரில் பிரித்து அயல்நாடு செல்ல வைப்பார். ஒரு சிலருக்கு மனைவி இழப்பு கூட நடைபெறும்.

மூத்த உடன் பிறப்புகளுக்கு ஆயுள் நன்றாக இருக்கும். ஒரு சில கிரகங்களை பொருத்து ஆயுள் மாறுபடும். ஒரு சில ஜாதகங்களில் இந்த தசாவில் மூத்த உடன் பிறப்புகள் மரணமும் எய்து இருக்கிறார்கள்அது அவர் அவர் ஜாதகத்தை பொருத்தது.

பொதுவாக ஆறாம் பாவம் என்பதே நோய் கடன் தான் முக்கியமாக நாம் எடுத்துக்கொள்ளுவது. ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருக்கும் போது நடக்கும் தசாவில் ஒருவர் எளிதில் கடனை பெற்றுவிடலாம். அது தான் ஆறாம் அதிபதியின் தன்மை.

இன்றைய வாழ்க்கையில் கண்டிப்பாக கடன் வாங்கி தான் வாழ்க்கையை ஒட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒட்ட வேண்டியது ஆகிவிட்டது இந்தியாவே கடனில் தான் இருக்கிறது இதில் மக்கள் என்ன செய்வார்கள் அவர்களும் கடனை வாங்கிதான் தன் வாழ்க்கையை நகர்த்தவேண்டியது இருக்கிறது.

வெளிநாடுகளில் ஒருவருக்கு வேலை இல்லை என்றால் அவருக்கு அந்த நாடு அவர்களுக்கு மாத மாதம் பணம் தருகிறது. இங்கு உள்ள அரசியல்வாதிகள் அவர்களின் மூலதனத்தை எப்படி பெருக்கலாம் என்று செயல்பட்டால் பாமரன் என்ன செய்வான் அவன் கடனைதான் வாங்குவான்.

என்ன பாமரன் வட்டிக்கு வாங்கி வாழ்க்கையை நடத்தும் போது அவன் வட்டியின் சுமையால் பாரத்தை தாங்கமுடியாமல் மாண்டுவிடுகிறான். இது தான் இன்றைய நிலை.

ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்து தசா நடக்கும் போது அவன் வட்டிக்கு பணம் வாங்குவான் ஆனால் நிறைய பேர் இதில் திருப்பி தரமாட்டார்கள் நம்ம நாட்டு வங்கியில் பணத்தை கோடிக்கணக்கில் வாங்கி ஏப்பம் விட்ட அரசியல் வாதிகள் எல்லாம் இதற்குள் அடக்கம்.

இதில் வேடிக்கையான விஷயத்தை பார்த்தீர்கள் என்றால் ஆறாம் வீடு பலன் பெற்றால் ஏழாம் வீடு பலனை இழந்துவிடும் என்று பார்த்தோம் அல்லவா நம்ம ஆட்கள் ஆறாம் வீட்டு தசாவில் கடனை வாங்கிவிட்டு மனைவி எல்லாம் விட்டு விட்டு ஒடிவிடுவார்கள் நம்ம ஊர் அரசியல்வாதிகள் வாழ்க்கையிலும் இப்படி நடக்கும் சாதாரண தொழிலாளி வாழ்க்கையிலும் இது நடக்கும். ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. இது எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் இது எல்லாம் தசா செய்யும் வேடிக்கை.


அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



4 comments:

saravana karthikeyan said...

நான் தற்போது நடைபெற்றுவரும் ராகு தசையில் கடன் வாங்கி ஒரு தொழில் தொடங்கினேன். ஊற்றிக்கொண்டுவிட்டது. தவிர இந்தக் கடனை அடைக்க நான் படாத பாடு பட்டு வருகிறேன். தனுர் லக்கினத்துக்கு சுக்கிரன் ஆறில் ஆட்சி. ஆனால் என் துரதிர்ஷ்டம் 90 வயதுக்கு மேல் தான் எனக்கு சுக்கிர தசை வரும் (கிருத்திகை நட்சத்திரம்)

rajeshsubbu said...

/* saravana karthikeyan said...
நான் தற்போது நடைபெற்றுவரும் ராகு தசையில் கடன் வாங்கி ஒரு தொழில் தொடங்கினேன். ஊற்றிக்கொண்டுவிட்டது. தவிர இந்தக் கடனை அடைக்க நான் படாத பாடு பட்டு வருகிறேன். தனுர் லக்கினத்துக்கு சுக்கிரன் ஆறில் ஆட்சி. ஆனால் என் துரதிர்ஷ்டம் 90 வயதுக்கு மேல் தான் எனக்கு சுக்கிர தசை வரும் (கிருத்திகை நட்சத்திரம்) */

வருக வணக்கம் சுக்கிர தசா பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம். நல்ல நேரம் வரும். தொடர்ந்து படித்து வாருங்கள் நீங்கள் நினைப்பது போல் தசா செயல்பாடு இருக்காது எல்லாத்தையும் கலந்து தான் தரும்.

@marupakkam93 said...

எனது பெரியப்பா பேரன் ஜாதகத்தில் கடக லக்கணம் ஆறில் குரு குரு தசாவில் மாமாவோடு சண்டை வந்து போக்குவரத்து இல்லையே காரணம் என்ன

rajeshsubbu said...

/*
Arulselvan said...
எனது பெரியப்பா பேரன் ஜாதகத்தில் கடக லக்கணம் ஆறில் குரு குரு தசாவில் மாமாவோடு சண்டை வந்து போக்குவரத்து இல்லையே காரணம் என்ன
*/

வருக வணக்கம் நான் எழுதுவது ஆரம்ப நிலையில் தான் உள்ளது நாம் எல்லா விபரத்தையும் எழுதலாம் ஏன் பலனை தரமாட்டேங்கிறது தசா எல்லாத்தையும் பார்க்கலாம் அதுவரை பொறுமை தேவை நண்பரே