Followers

Friday, January 2, 2015

செல்வவளம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

செல்வவளத்திற்க்கு என்று நிறைய கருத்துக்களை நான் பதிவில் சொல்லிக்கொண்டு வருகிறேன். அதனை பல நண்பர்கள் செய்துக்கொண்டு வருவது எனக்கு தெரிகிறது.

செல்வவளம் இயற்கையாக வருவது நமது பாக்கியம். நமக்கு ஜாதகம் சரியில்லை அப்படிப்பட்ட நிலையிலும் நாம் செல்வவளத்தோடு இருக்கவேண்டுமானால் நான் சொன்ன கருத்துகளை பின்பற்றி வரவேண்டும். பின்பற்றி வருவது மட்டுமல்ல என்னை ஏதாவது ஒரு விதத்தில் என்னை பின்பற்றி வரவேண்டும்.

என்னுடைய தொழில் நண்பர்கள் கூட என்ன செய்வார்கள் என்றால் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் என்னிடம் சொல்லுவார்கள். அப்பொழுது மட்டுமே அவர்களால் ஜெயிக்கமுடியும்.

என்னிடம் சொல்லுவதால் அவர்களின் ஒவ்வொரு செயலும் தடையின்றி நடைபெறும். நான் ஒன்றும் செய்வதில்லை அம்மன் அவர்களுக்கு உதவுகிறது.

ஜாதக கதம்பம் வழியாக வரும் நிறைய குடும்பங்கள் அப்படி தான் பின்பற்றி வருகிறார்கள். அதிகபட்சம் நான்கு மாதங்கள் பின்பற்றினாலே போதும் அவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். இதுவரை நீங்கள் செய்யவில்லை என்றாலும் இனிமேலாவது செய்ய தொடங்குங்கள்.

சென்னை பயணம் ஒத்திவைத்துள்ளேன். திருப்பூர் பயணம் மேற்க்கொள்கிறேன். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் நாளை என்னை சந்திக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: