Followers

Wednesday, January 21, 2015

சந்திப்பில் பெற்றவை


வணக்கம் நண்பர்களே!
                      சென்னையில் இருந்த நண்பர்களை எல்லாம் சந்தித்து வருகிறேன். முடிந்தவரை என்னை தொடர்புக்கொண்டு கூப்பிட்ட நண்பர்களை எல்லாம் பார்த்துவருகிறேன். பல நல்ல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன.

பல கருத்துக்களை நான் பதிவில் சொல்லாத கருத்துக்களை அவர்களோடு பகிர்ந்துக்கொள்வது உண்டு. பதிவில் பொதுவாக வைக்க முடியாத கருத்துக்களை பகிர்ந்துக்கொள்கிறேன். ஒவ்வொரு வீடுகளுக்கும் அதிக நேரம் ஒதுக்கி பேசிவிட்டு வருகிறேன்.

பொதுவாக அனைவரும் என்னோடு நல்லமுறையில் பேசுவார்கள். அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் போல் என்னை நடத்துவது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. 

என்னைப்பொறுத்தவரை வருபவர்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை செய்யவேண்டும் என்று தான் நினைப்பேன். செய்யகூடாது என்பது கிடையாது. ஆளை பார்த்து செய்யவேண்டும் பணத்தை பார்த்து செய்யவேண்டும் என்பது கிடையாது. வருபவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று மட்டும் தீர்மானமாக இருப்பேன்.

என்னை தேடி வருபவர்களிடம் என்னை சந்தித்து இருக்கிறீர்கள். கண்டிப்பாக ஒரு வாய்ப்பை தருகிறேன். அதில் உங்களுக்கு நல்ல முறையில் அமைந்துவிட்டால் என்னை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒவ்வொன்றாக பார்க்கலாம் என்று சொல்லுவது உண்டு. 

இதனை படிக்கும் உங்களுக்கும் சொல்லுவது அது மட்டுமே வரும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தினாலே போதும். குறிப்பிட்ட ஒரு சில மாதங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை நீங்கள் காணமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: