Followers

Thursday, January 8, 2015

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் தெற்கு மற்றும் மேற்கு பக்கம் இடம் விட்டு கட்டகூடாது என்று சொல்லிருந்தேன். அதனை படித்துவிட்டு நண்பர்கள் தொடர்புக்கொண்டு சந்தேகம் கேட்டனர். 

ஜாதகம் கூட நமக்கு தேவையில்லை நாம் என்னவாக போகிறோம் என்பதை நாம் முதலில் தீர்மானித்துவிடவேண்டும் அதன் பிறகு நாம் அதற்கு தகுந்தார் போல் அனைத்தையும் தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.

ஒருத்தருடைய எண்ணம் தான் அவனை வழிநடத்தும் மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்தது. நீங்கள் எப்படி வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றீர்களோ அதற்கு தகுந்தார் போல் அனைத்தையும் செய்துக்கொள்ளவேண்டும். உதாரணத்திற்க்கு நல்ல வசதி வாய்ப்போடு இருக்க வேண்டும் என்று நினைத்தால் வடக்கு பக்கம் இடவசதியை அதிகப்படுத்தி அதே நேரத்தில் அந்த இடத்தில் அதிகமாக நீங்கள் சம்பந்தப்படும்பொழுது உங்களுக்கு நேர்மையான வசதி கிடைக்கும்.

நான் தவறான வழியில் தான் சம்பாதிப்பேன். எனக்கு இருக்கும் எண்ணம் எல்லாம் தவறான வழியில் தான் சம்பாதிக்கவேண்டும் என்று  எண்ணுகிறேன் என்றால் அதற்கு மேற்கு பக்கம் அதிக இடவசதியை செய்துக்கொண்டு வாழும்பொழுது உங்களுக்கு தவறான வழியில் பணம் சேரும்.

முதலில் நீங்கள் என்னவாக மாறவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கு தகுந்தார்போல் மாற்றிக்கொள்ளுங்கள். இது தான் முதல் சூத்திரம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: