Followers

Tuesday, January 20, 2015

அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                      சென்னையில் இருப்பதால் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கூப்பிட்டார்கள். அவர்களில் புதிய வரவு நண்பர்களாக பார்த்து அவர்களை சந்தித்து வருகிறேன். நாளை முதல் ஏற்கனவே அறிமுகமான நண்பர்களை சந்திக்கவேண்டும்.

ஒவ்வொரு வீடுகளுக்கும் நானே நேரில் சென்று பார்த்து வருகிறேன். அவர்களின் உண்மையான நிலையை நான் இப்படி செல்லும்பொழுது நமக்கு தெரியவருகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு புதிய அனுபவத்தை பெறமுடிகிறது. என்னை சந்திப்பதில் அவர்களின் புதிய நண்பர்கள் நல்ல மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை பார்க்கும்பொழுதே தெரிகிறது.

என்னை சந்திக்கும்பொழுது அவர்களின் பிரச்சினையை பற்றியும் என்னோடு கலந்து ஆலாேசனை செய்கிறார்கள். என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு தருகிறேன் என்று சொல்லிவிட்டு வருகிறேன். பல இடங்களில் ஒன்றை நான் காணமுடிகிறது. என்ன என்றால் அனைத்தும் முடிந்த பிறகு என்னை சந்திப்பது நடக்கிறது. ஒரு பிரச்சினை ஆரம்பித்து அது முடிந்தபிறகு என்னை சந்திக்கிறார்கள்.

பிரச்சினை வந்தபிறகு நெட்டை தேடி படிக்கிறார்கள். அதன் பிறகு என்னை தொடர்புக்கொள்வது நடக்கிறது. எப்பொழுதும் ஒரு தேடுதல் இருக்கும்பொழுது மட்டுமே ஒருவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்வை நகர்த்த முடியும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடி வாங்கிய பிறகு இழப்பை சரிசெய்வது கடினமாக தான் இருக்கும். அதனால் முடிந்தவரை நமக்கு பிரச்சினை வரவில்லை என்று மட்டும் இருந்துவிடாதீர்கள். பிரச்சினை வருவதற்க்கு முன்பே உஷாராகிவிடவேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் முன் எச்சரிக்கையுடன் இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: