Followers

Wednesday, January 7, 2015

சோதனை


வணக்கம் நண்பர்களே!
                      இலவச சோதிட சேவையை நிறுத்திவிட்டேன். அதற்கு காரணம் அனைவரும் இலவச சோதிடத்தை மட்டும் பார்ப்பதோடு அவர்களின் வேலை முடிந்துவிடுகிறது. என்னைப்பொறுத்தவரை இலவச சோதிடம் கட்டணசோதிடம் என்று பார்க்காமல் பலனை சொல்லுவது எனது இயல்பு இதனை அனைவரும் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். இது மட்டும் தான் எனக்கு பிழைப்பு என்பதால் கட்டண சோதிடம் மட்டும் போதும் என்று இலவச சோதிடத்தை நிறுத்திவிட்டேன்.

இலவசசோதிடத்தை நிறுத்தினாலும் பல பேர் அதற்கு மெயில் அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். இலவச சோதிடத்திற்க்கு மெயில் அனுப்பினாலும் பரவாயில்லை பக்கம் பக்கமாக எனக்கு அவர்களின் பிரச்சினையை சொல்லி எழுதி அனுப்புக்கின்றனர். 

எரிந்துக்கொண்டு இருக்கும் வீட்டில் இருந்து என்ன எடுக்கலாம் என்பது எங்களின் பிழைப்பு. பிரச்சினையை வைத்து தான் நாங்கள் காசு பார்க்கிறோம்.  நீ இப்படி தான் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று எங்களை படைத்த ஆண்டவன் எழுதிய விதி.

ஒன்றை உங்களுக்காக சொல்லுகிறேன். மனித வாழ்க்கையில் பிரச்சினை என்பது இல்லாமல் இருக்காது. ஒரு கிரகம் நன்றாக இருக்கின்றது என்று சொன்னால் மீதி உள்ள கிரகங்கள் உங்களை அடிக்க தயாராக இருக்கிறது என்று தான் அர்த்தம். உங்களுக்கு நல்ல சோதிடம் தெரியும் இதனை நான் சொல்ல தேவையில்லை.

ஒவ்வொரு சோதனையும் ஏற்படும்பொழுது அதனை வெளியில் சொல்ல தேவையில்லை முடிந்தவரை ஆண்டவனிடம் பிராத்தனை வையுங்கள். அந்த நம்பிக்கை உங்களை காப்பாற்றும்.

பணம் இல்லை என்றால் அம்மனிடம் நல்ல பிராத்தனை வையுங்கள். அம்மன் உங்களை காப்பாற்றும். அதற்கு நீங்கள் பணம் கொடுக்கவேண்டும் என்பதில்லை. அம்மன் வழியாக முன்னேற்றம் அடையலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: