Followers

Friday, January 30, 2015

யோகம் வரும் நிலை


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று காலையில் அம்மன் கோவிலில் சில வேலைகள் இருந்தன அதனை முடித்துவிட்டு அதன் பிறகு ஆலங்குடி குருஸ்தலத்திற்க்கு சென்று வந்தேன். வீடு திரும்பியது இரவு நேரம் ஆகிவிட்டதால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. ஆலங்குடி குரு ஸ்தலம் எங்களின் வீட்டில் இருந்து சரியாக 50 கிலோ மீட்டர் உள்ளது. மிக பிரசித்திப்பெற்ற கோவில் எல்லாம் உங்களின் ஊரில் இருந்து மிக குறைவான தூரத்தில் தான் இருக்கின்றன.

நமது நண்பர்கள் அதுவும் சிங்கபூரில் இருக்கும் நண்பர்களாக இருந்தால் அவர்கள் என்னிடம்  நம்பர் எடுத்து தருவீர்களா என்று கேட்பது வழக்கம். நம்பர் என்றார் லாட்டரி சீட்டிற்க்கு நம்பர் எடுத்து தாருங்கள் என்று கேட்பார்கள்.

அம்மனிடம் கேட்டு நம்பரை வாங்கிக்கொடுங்கள் என்று கேட்பார்கள். அதிகமான பணத்திற்க்கு ஆசைப்பட்டு இப்படி எண்ண தோன்றுகிறது. நான் அம்மனிடம் இதுவரை எந்த ஒரு விசயத்திற்க்காகவும் கேள்வி கேட்டதில்லை என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னிடம் வருபவர்களுக்கு நல்லதை செய்துக்கொடு என்று ஒரு விண்ணப்பம் வைப்பேன். அதற்க்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்கும்.

லாட்டரி சீட்டு எந்த ஒரு திடீர் லாபம் எல்லாம் நமது பூர்வபுண்ணியத்தில் இருந்து வருவது மட்டுமே. பூர்வ புண்ணியம் நன்றாக இருந்தால் லாட்டரி எல்லாம் அடிக்கும். பூர்வபுண்ணியம் சரியில்லை என்றால் லாட்டரி அடிக்காது. பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியாதிபதி இரண்டும் நன்றாக இருந்தால் நீங்கள் லாட்டரி அதனை சார்ந்த விசயங்களில் ஈடுபடுங்கள். நம்பர் எல்லாம் நான் எடுத்துக்கொடுப்பதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: