Followers

Thursday, March 26, 2015

சக்தி


வணக்கம்!
         சக்தியைப்பற்றி நண்பர் பரமேஸ் ஒரு கேள்வி கேட்டுருந்தார். அதனை சம்பந்தப்படுத்தி ஒரு கருத்தை பார்க்கலாம். ஒரு மனிதரிடம் சக்தி இருக்கிறது என்பதை நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது என்று கேட்டார்.

நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தால் அறிந்துக்கொள்ளமுடியும் அல்லது ஒரு சக்தி உள்ள மனிதன் நம்மை பார்க்கும்பொழுது நமது இடுப்பில் வலி ஏற்படும். நமது குண்டலிணி சக்தி மேலே எழும்பொழுது நமது இடுப்பில் வலி ஏற்படும்.

ஆண்களை விட பெண்கள் எளிதில் அறிந்துக்கொள்வார்கள். குண்டலிணி சக்திக்கு முதுக்கெலும்பு மிக முக்கியபங்கு வகிக்கிறது. ஆண்களின் முதுக்கெலும்பு வலிமைடையதாக இருக்கும். குண்டலினி மேலே எழும்பொழுது ஆண்களால் அவ்வளவு எளிதில் கண்டுக்கொள்ளமுடியாமைக்கு இது கூட ஒரு காரணம் இருக்கலாம். பெண்களின் முதுகெலும்பு வலிமை குறைவாக இருப்பதால் சக்தியை தாக்குபிடிப்பதில்லை. இடுப்பில் வலி வந்து அவர்கள் எளிதில் புரிந்துக்கொள்வார்கள்.

ஒரு சில தியான மையங்களில் கூட நமது பின்புறத்தை தொட்டு குண்டலினி சக்தியை எழுப்புவார்கள். சக்தி உடைய மனிதர்கள் பார்வைபடும்பொழுதே குண்டலினி மேலே எழும். அதனை வைத்தே நாம் சக்தி உடைய மனிதர் என்று அறிந்துக்கொள்ளமுடியும்.

ஒரு சிலரின் சக்தி தாங்காமல் தலையை விட்டே வெளியில் போகும். அப்பொழுது சக்தியை கொடுப்பவர் அவரின் கையை சம்பந்தப்பட்டவரின் தலையில் வைத்து நிறுத்தவேண்டும். இது கொஞ்ச பெரிய விசயம் அனுபவத்தில் உள்ளவர்களால் மட்டுமே புரிந்துக்கொள்ளமுடியும்.

உங்களின் முதுக்கெலும்பை கொஞ்சம் வருடி கொடுங்கள். தடைப்பட்ட சக்தி மேலே செல்லுவதற்க்கு வழி வகுக்கலாம். கொஞ்சம் எச்சரிக்கையோடு செய்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு