Followers

Friday, March 6, 2015

ராசிநாதன்


வணக்கம்!
         ஒவ்வொருவருக்கும் அவர்களின் ஜாதகத்தில் ராசிநாதன் என்பவன் முக்கியமானவன். ராசிநாதன் பலம் இழந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு பிரச்சினை வந்துவிடும்.ராசிநாதன் நன்றாக இருக்கும்காலத்தில் ஒவ்வொருவருக்கும் பல நல்ல வாய்ப்புகள் வரும்.

இன்றைய நாளில் பாருங்கள் இரண்டு குருவும் உச்சத்தில் இருக்கின்றார்கள். அதாவது தேவகுருவும் அசுரகுருவும் உச்சத்தில் இருக்கிறார்கள். குருவும் சுக்கிரனும் உச்சத்தில் இருக்கின்றார்கள்.

உங்களின் ராசிநாதன் உச்சத்தில் இருக்கும் காலத்தில் உங்களின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். தொட்டது எல்லாம் துலங்கும். அந்த காலத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

ரிஷப ராசி, துலா ராசி, தனசு ராசி மற்றும் மீனராசிக்காரர்கள் நன்றாக இந்த காலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். என்ன தான் ராசிநாதன் உச்சமாக இருந்தாலும் அவனையும் கொஞ்சம் உசுப்பிவிட்டால் தான் அவனும் நமக்கு நன்மையை அதிகம் செய்வான். அவனுக்கு தகுந்த பரிகாரத்தை செய்து அவனை நன்றாக உங்களுக்கு கொடுக்க வையுங்கள்.

இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் நடக்கவேண்டும் என்றால் இந்த காலத்தில் நீங்கள் உங்களின் ராசிநாதனுக்கு பரிகாரம் செய்து உங்களின் வேலையை அதிவேகமாக செயல்படுத்துங்கள். பல வருடங்கள் நடக்காத வேலைகள் இந்த காலத்தில் நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: