Followers

Monday, March 2, 2015

கோவில் தரிசனம்


வணக்கம்!
          இன்று காலையில் பதிவை அளித்துவிட்டு சுவாமிமலைக்கு சென்றுவிட்டேன். சுவாமிமலை முருகனை தரிசனம் செய்வதற்க்கு ஒருவரை என்னை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். 

கும்பகோணம் சென்று அங்கிருந்து சுவாமிமலைக்கு சென்றோம். காலையிலேயே நல்ல வெயில் வந்துவிட்டது. வெயில் கொல்லுகிறது.  எனது உடல் வெயிலுக்கு தாங்காது. சென்னையில் இருக்கும் காலத்தில் நான் வெயில் நேரத்தில் வெளியில் வருவதில்லை.

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு சென்ற நேரம் காலை பனிரெண்டு மணி. அந்த வெயிலுக்கு உள்ளே கோவிலுக்கு சென்றவுடன் குளிர்ச்சியாக இருந்தது. அற்புதமான தரிசனம்.  முருகனை தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்தேன்.

இதனை ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் என்றால் பல வருடங்களாக பதிவை மட்டும் எழுதுக்கொண்டிருந்தேன். தற்பொழுது நண்பர்களை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டுச்செல்லும் வேலையை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

பலவருடங்களாக தொடர்பில் இருக்கும் நண்பர்களை மட்டும் என்னை அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்க்காக இப்படிப்பட்ட கோவில் தரிசனம் செய்கிறேன்.

நண்பர்களுக்காக 
                 பல நண்பர்கள் என்னை போனில் தொடர்புக்கொள்கிறார்கள் நான் கோவில் மற்றும் பூஜை என்று அழைந்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் தொடர்புக்கொள்வதாக இருந்தால் எனக்கு குறுந்தகலை அனுப்பிவிடுங்கள். உங்களை நான் தொடர்புக்கொள்கிறேன்.

வெளிநாடுகளின் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்வதாக இருந்தால் அவர்கள் என்னை தொடர்புக்கொள்ளும் நேரத்தை எனக்கு அனுப்பிவிடுங்கள். அந்த நேரத்தை உங்களுக்காக ஒதுக்கிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: