Followers

Tuesday, March 31, 2015

வீடு கட்ட பரிகாரம்


வணக்கம்!
          ஒவ்வொரு மனிதனக்கும் மிகப்பெரிய ஆசை எது என்று கேட்டால் அது தனக்கு ஒரு வீடு வேண்டும். சொந்த வீடு கட்டவேண்டும் என்று நினைப்பார்கள்.

நான் சந்திக்கும் நண்பர்கள் அனைவரிடமும் உங்களுக்கு என்று ஒருவீட்டை கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். பல பேர்களுக்கு நான் அதற்கு வழி செய்துக்கொடுத்து இருக்கிறேன்.

நிலத்திற்க்கு காரகம் வகிக்கும் முருகனை வழிப்பட்டு வந்தால் உங்களுக்கு என்று சொந்த நிலம் அமைந்து அதில் வீடும் கட்டிக்கொள்ள வழி செய்வார். பொதுவாக முருகனின் ராசி என்று சொல்லும் மேஷம் மற்றும் விருச்சிக ராசி நண்பர்கள் அனைவரும் வீட்டின் மீது ஒரு காதலே ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.

உங்களுக்கு வீடு இல்லை என்றால் முருகனை மனமார பிராத்தனை செய்துக்கொண்டு வாருங்கள். ஏதாவது ஒரு பிரசித்திபெற்ற முருகனின் கோவிலுக்கு சென்று வாருங்கள். உங்களுக்கு வீடு அமையும்.

நான் உங்களை சந்திக்கும்பொழுது எனக்கு வீடு இல்லை அதற்கு வழி செய்யுங்கள் என்று சொன்னால் உங்களை அழைத்துக்கொண்டு ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று வருவேன். அதன் வழியாக உங்களுக்கு வீடு அமையும்.

என்னை சந்தித்த பல நண்பர்களுக்கு இப்படி தான் அவர்களுக்கு வீடு கட்ட வழி செய்துக்கொடுத்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: