Followers

Sunday, March 29, 2015

அம்மன் அருள்


வணக்கம்!
          நம்மை சந்திப்பவர்களுக்கு எப்படியும் ஒரு வாய்ப்பை அம்மனை வைத்து வழங்கிவிடுகிறேன். அந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.

நண்பர்கள் பல பிரச்சினைகளுக்கு நம்மை சந்திக்க வருகின்றனர் அதுவும் தொழில் துறையில் உள்ளவர்கள் அதிகம் வருவார்கள். அவர்களின் பிரச்சினைகளை போக்க முதலில் அம்மனை வைத்து வாய்ப்பை மட்டும் கொடுப்பது உண்டு. ஜாதகத்தை கையில் எடுக்காமல் அம்மனை மட்டும் வேலை வாங்குவது உண்டு.

அம்மன் எப்படியும் ஒரு நல்ல வாய்ப்பை கொடுக்கும். நம்ம ஆட்கள் விழிப்பு இல்லாமல் அதனை தவறவிடுபவர்கள் உண்டு. நான் எப்படியும் காப்பாற்றவேண்டும் என்று தான் நினைக்கிறேன். நம்ம ஆட்களின் விதியா அல்லது அறிவு இல்லாததனமா என்று தெரியவில்லை அதனை விட்டுவிடுகிறார்கள்.

இனிமேலும் வருபவர்கள் கொஞ்சம் விழிப்புணர்வோடு வாருங்கள். அம்மன் வாய்ப்பை தவறவிடகூடாது என்று வாருங்கள். நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு