Followers

Thursday, March 5, 2015

உங்களை உயர்த்தும் வழிகள்


வணக்கம்!
          நமது வாழ்க்கையை செம்படுத்தி அதன் வழியாக முன்னேற்றம் அடைய வைப்பதற்க்கு தான் ஆன்மீகம் தேவைப்படுகிறது. முஸ்லீம் மக்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுது தன்னுடைய வாழ்வை உயர்த்திக்கொள்வதுபோல் பிறர் உயர்த்திக்கொள்ள விளைவதில்லை. நம்ம ஆட்களை ஐந்து நேரம் சாமி கும்பிடவேண்டும் என்றால் நம்ம ஆட்கள் என்ன சொல்லுவார்கள் என்பதை மட்டும் நீங்கள் நினைத்து பாருங்கள்.

தொடர்ச்சியாக ஒரு வழிபாட்டை செய்து வரும்பொழுது மட்டுமே அதன் வழியாக நமக்கு முன்னேற்றம் என்பது ஏற்படும். தொடர்ச்சியாக இல்லை என்றால் அந்த வழிபாடு முன்னேற்றத்தை தராது. நம்ம ஆட்கள் உடனே பணம் வேண்டும் என்று நினைப்பார்கள். நம்மை ஒழுங்குப்படுத்திக்கொண்டு பணத்திற்க்கான வழியை நாடும்பொழுது நமக்கு பணமும் வரும். பணமும் நம்மிடமே இருக்கும்.

நம்ம ஆட்கள் தெய்வத்தை நம்புவதே பெரிய கஷ்டம் அதில் வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்கள் என்று சொன்னால் எப்படி செய்வார்கள். என்னை தொடர்ச்சியாக நம்பி வரும் எத்தனையோ குடும்பங்களுக்கு நான் நல்லதை செய்து இருக்கிறேன் என்றால் அவர்கள் தொடர்ச்சியாக என்னை நம்பிவருவது மட்டுமே. 

நான் பிறரை சோதனை செய்வது போல் அந்த சிவனே சோதனை செய்து இருக்கமாட்டான். தொடர்ச்சியாக வருகிறார்களாக என்று பார்ப்பதற்க்கு தான் அப்படி சோதனை செய்து இருக்கிறேன்.

உங்களின் குலதெய்வத்திற்கே நீங்கள் பூஜை செய்தாலும் அந்த பூஜை தொடர்ச்சியாக அமையும்பொழுது மட்டுமே உங்களின் குலதெய்வம் உங்களை காப்பாற்றும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: