Followers

Thursday, March 5, 2015

பெளர்ணமி


வணக்கம்!
         இன்று பெளர்ணமி. மகம் நட்சத்திரம் காலை 9:15 மணிக்கு முடிவடைந்துவிட்டது. அதன் பின்பு பூரம் நட்சத்திரம். மாசி பெளர்ணமி என்பதால் விசேஷம். 

எங்கள் பகுதியில் காமாண்டி என்ற ஒன்று இருக்கிறது. அதாவது மன்மதனின் கோவில். வளர்பிறை ஆரம்பித்த நேரத்தில் இருந்து மன்மதன் கோவில் விஷேச பூஜை நடைபெற்று வரும். இன்று காமதகனம் நடைபெறும்நாள். 

உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்யும் நாள். குலதெய்வம் தெரியாதவர்கள் உங்களின் இஷ்டதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்யலாம்.

சிவபூஜையைப்பற்றி சொல்லி இருக்கிறேன். இன்று பெளர்ணமி என்பதால் சிவன் ஆலயத்திற்க்கு சென்று வழிபாடு நடத்துங்கள். வியாழக்கிழமை என்பதால் குரு வழிபாடும் நல்லது.

இன்று சிவனுக்கு நீங்கள் அபிஷேகம் செய்யுங்கள். வீட்டிலேயே சிவனை வைத்து வழிபாடு செய்வதைப்பற்றி சொல்லிருக்கிறேன். அந்த பூஜையை இன்று செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: