Followers

Sunday, November 1, 2015

இனிய தொடக்கம்


ணக்கம்!
          ஒரு சிலரை பார்த்திருக்கிறேன் அவர்கள் நிறைய உதவியை அடுத்தவர்களுக்கு செய்வார்கள். அவர்கள் அந்தளவுக்கு பெரிய அளவில் உயருவதில்லை. இது எதனால் என்று நன்றாக ஆழ்ந்து அவர்களை பார்த்தால் அவர்களிடம் ஏதாவது பீடை ஏற்படுவது போல் ஒரு காரியத்தை செய்துக்கொண்டு இருப்பார்கள்.

நல்லதை செய்யும்பொழுது நாம் கொஞ்சம் உண்மையாக இருந்துவிடவேண்டும். உண்மையை விட்டு விட்டு நல்லது செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நாம் நல்லதை செய்தால் கூட நமது நிலையில் இருந்து மாற்றம் வரப்போவதில்லை.

நம்மிடம் இருக்கும் தீயகுணம் என்ன என்று கண்டுபிடித்து அதனை போக்கிக்கொள்ள என்ன வழி என்று பார்க்கவேண்டும். நம்மிடம் உள்ள தீயவிசயத்தை வெளியேற்றிவிட்டு நாம் சரியான முறையில் பாக்கியஸ்தானத்தில் சொல்லப்பட்ட வழிபோல் செய்தால் குறுகிய காலத்தில் வெற்றியை நோக்கி செல்லாம்.

நமக்கு வருகின்ற வாய்ப்பை தட்டிகழிப்பது தான் பாக்கியஸ்தானத்தில் உள்ள குறைபாடு. நமக்கு கொடுப்பதும் அதே பாக்கியஸ்தானம் தான். நாம் பிறர்க்கு கொடுக்கும்பொழுது நமக்கு பாக்கியஸ்தானம் கொடுக்கும்.

உங்களிடம் என்ன தவறு இருக்கின்றது என்பதை பாருங்கள். கண்டிப்பாக ஏதாவது ஒரு தவறு நம்மிடம் இருக்கும். அந்த தவறை படிப்படியாக குறைத்துக்கொண்டு பிறர்க்கு நல்லதை செய்து முன்னேற்றபாதையில் செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: